districts

img

சமூக வன உரிமை மேல் முறையீட்டு மனு மீது விரைந்து நடவடிக்கை வேண்டும்

கோபி, டிச.16- சமூக வன உரிமை மேல்முறை யீட்டு மனு மீது விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டி கோபி சார்  ஆட்சியரிடம் திங்களன்று பழங்குடி யின மக்கள் கோரிக்கை மனு அளித் தனர். 2006 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வன  உரிமைகள் அங்கீகாரச்சட்டம், வனத்தில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களின் பல்வேறு  வன உரிமைகளை அங்கீகரிக்கி றது. இச்சட்டப்படி பழங்குடியினர் மற்றும் இதர வனம் சார்ந்து வாழும் பழங்குடி மலைவாழ்மக்கள் வன நிலத்தில் பயிரிட்டு வந்தாலோ அல் லது குடியிருந்து வந்தாலோ அவர் களது தனி நபர் வன நில உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். வனம்  சார்ந்து வாழும் மக்களின் சிறு வன  விளைப் பொருள் சேகரித்து விற் பனை செய்தல், மூலிகைகளை பயன்படுத்துதல், கீரைகள், பழங் கள், கிழங்குகள் போன்றவற்றை சேகரித்தல் விற்பனை செய்தல், வனப்பகுதியில் கால்நடைகளை மேய்த்தல், வனத்தில் உள்ள நீரா தாரங்களை பயன்படுத்துதல், வனக்கோயில்களில் வழிபாடு செய் தல் போன்ற பல்வேறு சமூக வன  உரிமைகளும் அங்கீகாரம் செய் யப்பட வேண்டும். இதுகுறித்து கடந்த இரண் டாண்டுகளுக்கு முன் சோளகர் தொட்டி, பாலப்படுகை, கோடம் பள்ளி, அல்லபுரதொட்டி, ராம ரணை, இட்டறை, தடசலட்டி, பெஜ லட்டி, மாவநத்தம், காளிதிம்பம் ஆகிய தாளவாடி வட்டத்தில் உள்ள  பத்து பழங்குடியினர் கிராமசபை கள் அங்கீகரத்திற்கான கோரிக்கை களை கோட்டாட்சியர் தலைமையி லான குழுவிற்கு அளித்திருந்தனர்.  ஆனால் வழங்கப்பட்ட ஆவ ணம் முழுமையானதாகவும், சட்டப் படியானதாகவும் இல்லை கிராம சபைகளின் கோரிக்கைகள் முழு மையாக அங்கீகரிக்கப்பட வில்லை ஒரு கிராமத்திற்கு வழங் கப்பட்ட அங்கீகாரம் பக்கத்தில் உள்ள மற்ற கிராமத்திற்கு வழங் கப்படவில்லை அங்கீகாரம் அளிக் கப்படாததன் காரணமும் கிராம சபைகளுக்கு தெரிவிக்கப்பட வில்லை. ஆகவே பத்து கிராம சபைக ளும் மேல் முறையீடு செய்திருந் தன. தங்களது மேல் முறையீட் டின் மேல் விரைவான நடவ டிக்கைகளை கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் மேற்கொண்டு வன உரிமைச் சட்டப் படி முறையான அங்கீகார ஆவ ணத்தை வழங்க வேண்டும் என  பழங்குடி கிராம சபைத்தலைவர் கள் தலைமையில் 200க்கும் மே ற் பட்ட பழங்குடி மக்கள் திங்களன்று கோபி சார் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.