உதகை, ஆக.20- தேவர்சோலை பகுதியில் அகழி அமைக் கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று வனத்துறையினரிடம், பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூ ராட்சிக்குட்பட்ட தேவர்சோலை பஜார், வுட் பிரையர், செம்பக்கொல்லி, மச்சிகொல்லி மட் டம், காரக்குன்னு, கிரவுன்ட் பாடி உள்பட பல் வேறு பகுதிகளில் காட்டுயானைகள் நட மாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகி றது. இந்நிலையில், தேவர்சோலை அருகே காரக்குன்னு பகுதியில் 4 காட்டுயானைகள் நுழைந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வன வர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காட்டுயானைகளை விரட்டியடித்தனர். இதன் பின் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழி தோண்டும் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று வனத்துறையின ருக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், அப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சரை சந் தித்து முறையிட உள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொதுக்கள் மேலும் கூறு கையில், முதுமலை எல்லை பகுதியான போஸ் பாரா முதல் செம்பக்கொல்லி வழியாக மேபீல்டு வரை அகழி அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பாடந்தொரையை ஒட்டிய கிராம எல்லைகளில் அகழி அமைக் கப்பட்டு வருவதால், அப்பகுதியில் யானை கள் நடமாட்டம் குறைந்துள்ளது. ஆனால், வேறு வழியாக வுட்பிரையர் மற்றும் தேவர் சோலை பஜார் பகுதிக்குள் காட்டுயானை கள் வருகிறது. இதை தடுக்க காரக்கொல்லி வரை அகழி அமைக்க வேண்டும், என்றனர்.