தருமபுரி, நவ.5- எலக்ட்ரிக்கல் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க சிஐடியு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம், தருமபுரி சிஐடியு அலு வலகத்தில் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எலக்ட்ரிக்கல் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து நலவாரிய பயன்களை வழங்க வேண்டும். எலக்ட்ரிக் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்கவேண்டும். தொழிலாளர்க ளுக்கு விபத்தில் உடல் ஊனம் மற்றும் இறப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, எலக்ட்ரிக் தொழி லாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிர மணியன், சிஐடியு மாநில செயலாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி.ஜீவா, மாவட்ட அமைப்பு செயலாளராக வி.லிங்கேசன், மாவட்டச் செயலாளராக பி.பெரியண்ணன், பொருளாளராக விஜயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.