districts

img

சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, மே 31- போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சின்ன முருக்கம்பட்டி - வெதரம்பட்டி சாலையை சீரமைக்க வேண் டும் என்கிற கோரிக்கையை பொதுமக்கள் எழுப்பினர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்டது சின்னமுருக்கம்பட்டி - வெதரம்பட்டி சாலை. இந்த  சாலையின் வழியாக சின்னமுருகம்பட்டி, பெரியமுருக்கம் பட்டி, மல்லியம்பட்டி, மாரியம்மன் நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும், பள்ளி கல்லூரி மாணவர்கள், இந்த வழியாக ஒடசல்பட்டி, தருமபுரிக்கும் மற்றும் கம்பைநல்லூர் அரூருக்கு சென்று வரு கின்றனர்‌. மேலும், சின்னமுருக்கம்பட்டி - வெதரம்பட்டி சாலையை வேளாண் விளைப்பொருட்களை சந்தை படுத்துவதற்காக வும், விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை  அமைத்து பல ஆண்டுகளாகிறது. இச்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், நடந்து செல்வோரும், இருசக்கர வாகனத்தில் செல்வோரும் மிக வும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் சின்னமுருக்கம்பட்டில் இருந்து வெதரம்பட்டி வரை உள்ள சாலையை சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

;