districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரசு தொடக்கப்பள்ளிகளில் இணையதள வசதி வழங்க வலியுறுத்தல்

திருப்பூர். நவ.16- அனைத்து அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிக ளிலும் கணினி மற்றும் இணையத்தள வசதியை உறுதி படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கல்வித்துறை எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பள்ளிக ளுக்குத் தகவல் அனுப்புதல்,  போட்டி தேர்வுகள் குறித்த விப ரங்கள், போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்படுவது, மாணவர் களின் விவரங்களைக் கேட்பது, அரசின் அறிவிப்புகள் போன்று அனைத்தும் இப்போது இணையதளம் வாயிலா கவே அனுப்படுகிறது. ஆனால், பல தொடக்கப்பள்ளி மற்றும்  நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிகளில், இணையதளம் வசதியோ  கணினி வசதியோ இல்லை. அதனால் ஆசிரியர்களின் கைப் பேசிக்கே இமெய்ல் அனுப்படுகிறது. கைப்பேசி மூலம் மாண வர்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை அனுப்புவ தற்கு சிரமம் உள்ளதாகவும்,  ஆசிரியர்கள் தெரிவிக்கின்ற னர். இணையதள வசதியுடன் கூடிய கணினி அத்தியாவசி யமாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். குறிப் பாக தொடக்கப்பள்ளிகளில், இந்த வசதியில்லாததால் தனி யார் மையங்களுக்குச்சென்று தான் ஆசிரியர்கள் விவ ரங்களை கல்வித்துறைக்கு அனுப்புகின்றனர். நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி வழங்கப்படும் என அரசு  அறிவித்திருந்தது. ஆனால், முழுமையாக இன்னும் நிறை வேற்றப்படவில்லை. மாணவர்களுக்கு நிகழ்கால எடுத்துக் காட்டுகள், காணொளிகள் காண்பிப்பதற்கும், அவர்களின்  கல்வி தொடர்பாகச் செயல்படுவதற்கும், இணையதள வசதி  தேவையாக உள்ளது. தற்போது வரை ஆசிரியர்களின் கைப் பேசிகளில் போடும் ரீச்சார்ஜ் போதுமானதாக இல்லை.  இதனால் பல நேரங்களில் இணைய வசதியைப் பயன்ப டுத்த முடிவதில்லை. எனவே பள்ளிகளில் தடையில்லா இணையச் சேவை பெறுவதற்கும், கணினி வசதி வழங்குவ தற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பள்ளி நிர்வா கத்தினர் கூறுகின்றனர்.

அங்கன்வாடி மையம் முன் கழிவு நீர்

திருப்பூர், நவ.16- திருப்பூர் காதர்பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையம்  முன் கழிவு நீர் தேங்கி நிற்பதால் குழந்தைகளை பெற்றோர்  திரும்ப வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். கடந்த வாரம் முழுவதும் பலத்த மழை பெய்தால் மாவட் டத்தின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்நிலை யில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காதர்பேட்டை நடு நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி  பள்ளியில் 30 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த  அங்கன்வாடி மையத்தின் நுழைவுப் பகுதியில் மழைநீருடன்  சாக்கடை நீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அங்கன் வாடி மையத்துத்துக்குள் குழந்தைகள் செல்ல முடியாத சூழல்  நிலவி வருகிறது. மேலும், தேங்கியுள்ள கழிவுநீரால் துர்நாற் றம் வீசுவதுடன் குழந்தைகள் அதில் வழுக்கி விழும் அபாய  நிலையும் உள்ளதால், பெற்றோர்கள் குழந்தைகளை செவ் வாய்க்கிழமை திரும்ப வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இது  குறித்து தகவல் கல்வித் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரி களுக்குத் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக் கவில்லை எனக் கூறப்படுகிறது. மழை காலங்களில் இது  போல் மழை நீர் தேங்கி நிற்காமல் இருக்க சீரமைப்பு பணி களை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித் தனர்.

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

திருப்பூர், நவ.16- கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக சார்பில் ‘உற்பத்தி யைப் பெருக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள் எனும்  தலைப்பில் வானொலி பண்ணைப் பள்ளி வகுப்பு நாளை முதல் முதல் தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும்  ஆராய்ச்சி மையத் தலைவர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் கால்நடை பல்க லைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம், கோவை அகில இந் திய வானொலி சாா்பில் ‘உற்பத்தியைப் பெருக்கும் நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்’ எனும் தலைப்பில் வானொலி பண்ணைப் பள்ளி வகுப்புகள் வரும் நவ.18 ஆம் தேதி  சனிக்கிழமை முதல் வாரந்தோறும் ஒரு வகுப்பு என 13 வகுப்பு கள் நடைபெறவுள்ளன. இதன் ஒரு பகுதியாக பயிற்சியின் இறு தியில் நேரடியாக பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் கலந் தாலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், பயிற்சி  கையேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்படும். இந்த பண் ணைப் பள்ளியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றி தழ் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள விருப்பமுள் ளவர்கள் வெள்ளியன்று (இன்று) ரூ.200 கட்டணம் செலுத்தி  முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த பண்ணைப் பள்ளி வகுப்புகளுக்கான கட்டணத்தை  இம்மையத்தின் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது இணைய வங்கி சேவை வழியாகவோ செலுத்தலாம். இணைய வழியில் கட்டணம் செலுத்தியவர்கள் அலுவலக  மின்னஞ்சல் முகவரியில் உரிய பணப் பரிவர்த்தனை எண்ணு டன் தங்களுடைய பெயர், முழு முகவரி மற்றும் கைப்பேசி  எண் ஆகிய தகவல்களை சேர்த்து அனுப்ப வேண்டும். மேலும்  விவரங்களுக்கு 9443551869, 9442350740, 0421-2248524 ஆகிய  எண்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.

வாக்காளர் சேர்த்தல் சிறப்பு முகாம்:  நவ.25,26 தேகளுக்கு மாற்றம்

திருப்பூர், நவ.16- திருப்பூர் மாவட்டத்தில் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில்  நடைபெற இருந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளுக்கு மாற்றம்  செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர்  மாவட்டத்தில் நவம்பர் 18,19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த் தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம்  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய  தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தோ்தல்  அதிகாரி, முதன்மை அரசு செயலாளர் ஆகியோரின் அறிவு ரைகளின்படி இந்த சிறப்பு முகாம்கள் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி வாக்காளர் பட்டி யலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயர்களை சேர்த்து  கொள்ளலாம். இதுபோல திருத்தம், முகவரி மாற்றம், பெயர்  நீக்கம், குடியிருப்பு மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள் ளலாம். மேலும் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்க லாம் எனத் தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி மது விற்பனை: 9 பேர் கைது
தருமபுரி, நவ.16- தருமபுரியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்த வந்த 9 பேரை போலீசார் கைது செய்து, 270 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல்  கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், கம்பைநல்லூர் போலீசார் மொரப்பூர் சாலையில் உள்ள ஜெயம்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கையில் சாக்குமூட்டையுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அங்கு நின்று கொண்டிருந்த நபரை, போலீசார் பிடித்து, விசாரணை நடத்தி யதில் அரூர் அருகே நவலை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் ஷ்வரன் (52) என்பதும், அனுதியின்றி சாக்கு மூட்டையில் 30 மதுபாட்டில்களை விற்பனைக்காக எடுத்து சென்றதும் தெரி யவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து, அவரி டமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, தருமபுரி மாவட்ட மதுவிலக்கு பிரிவு  போலீசார் சோதனை செய்ததில் பாலக்கோட்டில் ஒருவ ரும், மற்ற இடங்களில் 5 பேரும் என மாவட்டம் முழுவ தும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மொத்தம்  270 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு: 82 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

ஈரோடு, நவ.16- தீபாவளிப் பண்டிகைக்கு பிறகு கடந்த இரண்டு நாள்களில் ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் 82 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்ட லங்களில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் சேரும் குப்பைகளை அகற் றும் பணியில் 1,500-க்கும் மேற்பட்ட மாநக ராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு  வருகின்றனர். இவர்கள் மக்கும் குப்பை,  மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பை களை சேகரிக்கின்றனர். மாநகராட்சிப் பகு தியில் தினமும் சுமார் 270 டன் குப்பைகள் சேரும். இந்நிலையில், தீபாவளிப் பண்டிகை  கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப் பட்டதையொட்டி, மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் பட்டாசு கழிவுகள், புத்தாடை வாங்கிய கவர்கள், அட்டைப் பெட்டிகள் குவிந்து கிடந்தன. இத னால் மாநகர் பகுதியில் 82 டன் பட்டாசுக் கழிவுகள் சேர்ந்தன.  இந்தப் பட்டாசுக் கழிவுகளை அகற்றும்  பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியா ளர்கள் 320 போ் கடந்த 2 நாள்களாக ஈடுபட் டனர். தீபாவளிப் பண்டிகை நாளில் சேர்ந்த  பட்டாசுக் குப்பைகள் முழுமையாக அகற்றப் பட்டுவிட்டது என சுகாதாரப்பிரிவு அதிகாரி கள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனை உணவகத்தில் ஆய்வு

நாமக்கல், நவ.16- நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவகம் சுகா தாரமாக உள்ளதா என்பதை கல்லூரி முதல் வர் மற்றும் மருத்துவர்கள் குழுவினர் ஆய்வு  செய்தனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் உள்ள தனியார் உணவகத்தில் கண்ணாடி பெட்டிக்குள் வைக் கப்பட்டிருந்த திண்பண்டங்களில் எலி ஒன்று  ஊடுருவி அங்கும், இங்குமாகச் செல்வதும்,  அவற்றை சாப்பிடுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியார் உணவகத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.சாந்தா அருள்மொழி, உள்தங்கும் மருத்துவர் கண்ணப்பன் மற்றும் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய் தனர். அப்போது, உணவு பண்டங்களையும் குடிநீரையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நாள்பட்ட, பூச்சிகள் மொய்த்த பண்டங்களை நோயாளிகளுக்கு, பொது மக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. புகார்கள் வந்தால் உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனா்.  தொடர்ந்து, அங்கு உணவு உண்டவர்க ளிடமும் புகார்கள் ஏதேனும் இருப்பின் மருத் துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினர்.

ரூ.46 லட்சத்தில் புதிய சுகாதார நிலையம்
கோபி, நவ.16- ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் தாமரை கரை, பெஜலட்டி, பெஜ்ஜில்பாளையம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இம்மலை கிராம மக்கள் மருத்துவ வசதிக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், நோய்த் தொற்று காலங்களிலும், அவசர மருத்துவ உதவிக்கா கவும், பர்கூர் மலைப்பகுதியில் கூடுதல் துணை சுகா தார நிலையங்கள் அமைத்து கொடுக்க வேண்டும் என  அப்பகுதி பொதுமக்கள் நீண்டகாலம் வலியுறுத்தி வந்த னர்.  இந்நிலையில், பர்கூர் மலைப்பகுதியான பெஜ்ஜில்பா ளையத்தில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப துணை  சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், அதற்கான கட்டடத்திற்கு ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ அடிக்கல் நட்டு, பணிகளை துவக்கி வைத்தார். 

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடி நகைக்கடை உரிமையாளர் மீது மக்கள் புகார்

சேலம், நவ.16- சேலத்தில் கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டங்களை அறி வித்து பல கோடி ரூபாய் மோசடி செய்த நகைக்கடை உரிமை யாளர் மீது பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரி சங்கர். இவர் சேலத்தில் அம்மாப்பேட்டை, ஆத்தூர், தருமபுரி, அரூர், நாமக்கல் ஆகிய 11 இடங்களில் கிளைகளை தொடங்கி நகைக்கடை நடத்தி வந்தார். பழைய நகைகளை வாங்குவது, புதிய நகைகளுக்கு பணத்தைக் கட்டினால் குறிப்பிட்ட நாளில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்கிக் கொள்ளலாம் உள்ளிட்ட கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இதை  நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் பணத்தை முதலீடு செய்த னர். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு 11 கிளை களையும் மூடிவிட்டு சபரி சங்கர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், நகைக்கடையில் பணத்தை முதலீடு செய்து  ஏமாற்றமடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சேலம் மாந கர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நகைக்கடை உரிமை யாளர் சபரிசங்கர், இரண்டு மேலாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். நாமக்கல் இதேபோன்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச் செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் அந்த தனியார் நகைக்கடை யின் கிளைகள் செயல்பட்டு வந்தன. இங்கு 300க்கும் மேற் பட்டோர் நகைக்காக பணம் செலுத்தியுள்ளனர். மோசடி குறித்த தகவலறிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் பாதிக்கப்பட்டோர் புகாாளித்தனர். இதனிடையே, “தங்களை நம்பியே பொதுமக்கள் பணம் செலுத்தியதாக வும், மோசடியால் தற்போது பணத்தை திரும்பத்தருமாறு தங் களிடம் கேட்கின்றனர்” என அந்த நகைக்கடையில் பணி யாற்றிய ஊழியர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், நகைக்கடை ஊழியர்களும் மாவட்ட காவல் கண் காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.