புதிய சாலை பெயர்ந்து சேதம்
உதகை, பிப்.7- கோத்தகிரி பேரூராட் சிக்கு உட்பட்ட புதிய சாலை யில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுதால் வாகன ஓட்டிகள் அச்சத் துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட கம் பாய்கடை ஹாப்பிவேலி பகுதியில் சுமார் 400 குடும் பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிமெண்ட் சாலை பழுதடைந்ததால் அதனை சரி செய்து தர வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் மனு மூலமாக கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத் திற்கு தெரிவித்தனர். இதையடுத்து பழுத டைந்த சாலை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் புதிய சாலை அமைக்க நுழைவு வரி திட்டம் மூலம் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்த னர். அதன் மூலம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சாலை பணி ஆமை வேகத்தில் நடை பெற்று கடந்த 5 மாதங் களுக்கு முன்னர் நிறைவ டைந்தது. இந்நிலையில், 5 மாதங்கள் முடிந்து தற் போது அந்த சாலையில் சிமெண்ட் மற்றும் ஜல்லி கற் கள் பெயர்ந்து காணப்படு கிறது. ரூ.5 லட்சம் மதிப் பீட்டில் போடப்பட்ட சாலை 5 மாதத்தில் பெயர்ந்த சம் பவம் இப்பகுதி மக்களி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரமற்ற பொருட்களை கொண்டு சாலை அமைக் கப்பட்டதா என்ற கேள்வியும் இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
திருப்பூரில் சாலையை செப்பனிட வலியுறுத்தல்
திருப்பூர், பிப்.7- திருப்பூர் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை உடனடி யாக செப்பனிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளை யம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: அவினாசி கைகாட்டி முதல் அவினா சிபாளையம் வரை தேசிய நெடுஞ்சாலை எண் 381 திருப்பூர் நகரின் ஊடாக செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப் பட்டுள்ள திருப்பூரின் அவினாசி சாலையில் பல இடங்க ளில், மாநகராட்சி குடிநீர் வழங்கல் பிரிவு, குழாய் பராமரிப்புக் காக சாலையை தோண்டுவதும், மூடுவதும் பிறகு மீண்டும் தோண்டுவதும் மூடுவதுமாக இருந்து வருகிறது. திருப்பூர் மாநகர எல்லைக்குள் உள்ள தேசிய நெடுஞ் சாலை 381 சாலையை உடனடியாக தரமாக சீரமைத்திடு மாறு மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் கூறியுள்ளார்.
அனுமதியற்ற விளம்பர பலகைகள் பிப்.10 முதல் அகற்றப்படும்: ஆணையர்
அனுமதியற்ற விளம்பர பலகைகள் பிப்.10 முதல் அகற்றப்படும்: ஆணையர் திருப்பூர், பிப்.7– திருப்பூர் மாநகரில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக் கும் விளம்பரப் பதாகைகளை அகற்றிக் கொள்ளும்படியும், இல்லாவிட்டால் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மாநகராட்சி நிர் வாகம் அகற்றும் நடவடிக்கையைத் தொடங்கும் என்றும் மாந கராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் கூறியிருக் கிறார். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பல கைகள், விளம்பரப் பலகைகள் மற்றும் பதாகைகளை அகற் றிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 9ஆம் தேதிக்குள் அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும், பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அனுமதியற்ற மேற்படி பலகைகள் அகற்றப்ப டும் என்றும் அவர் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருக்கிறார்.
சிவா ஈமு பார்ம்ஸ் சொத்து பிப்.16இல் பொது ஏலம்
திருப்பூர், பிப். 7 - திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வந்த சிவா ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனத்திற்கு பாத்தியப்பட்ட திருப்பூர் தெற்கு வட் டம், நாச்சிபாளையம் கிராமத்தில் உள்ள புல எண். 174/1 மற் றும் 174/2யு –ல் உள்ள 0.75 ஏக்கர் நிலம், அதில் 494 சதுரமீட்டர் பரப்பளவுள்ள தார்சு கட்டிடம், 203.32 சதுர மீட்டர் பரப்பள வுள்ள சிமெண்ட் சீட் கட்டிடம் மற்றும் 5 ஆழ்துழாய் கிணறு கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம், 1997-ன்கீழ், மாவட்ட வருவாய் அலுவலரால் பிப்ரவரி 16 அன்று முற்பகல் 11.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 2-ஆம் தளத்தில் உள்ள அறை எண்: 240 கூட்ட அரங்கில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. மேற்கண்ட சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர், ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங் களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகம், தாராபுரம் உள்ளிட்ட உடுமலைப் பேட்டை கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையி லும் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத் தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம், ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப் பத்தினை பிப்.14 அன்று மாலை 5 மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவ லகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட வரு வாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.
உடுமலையில் நாளை மின்தடை
உடுமலை, பிப்.7- உடுமலைப்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு வேலைகள் நடைபெறவுள்ள தால் 9 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் உடுமலைப்பேட்டை நகரம், பழனி பாதை, தங்கமாள் ஓடை, இராகல்பாவி, சுண்டக்காம்பாளை யம், ஆர்.வேலூர், கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம்பாளையம், பொட்டிநாயக்கனுர், சோமவாரம்பட்டி, பெதப்பம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிச்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர்நகர், ஜீவா நகர், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, மற்றும் குறிச்சிக்கோட்டை ஆகிய பகு திகளில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பிப்.11 திருப்பூரில் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா
திருப்பூர், பிப்.7– திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் மாநகராட்சி இணைந்து வரும் 11ஆம் தேதியன்று மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழாவை நடத்துகின்றனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழ னன்று இந்த வேலைவாய்ப்புத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலு வலர் ஜெய்பீம், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாநக ராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், மாநக ராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் இந்த வேலைவாய்ப்புத் திருவிழா திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் 11ஆம் தேதி சனியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த முகாமில் 800க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன. இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்தார். 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்று வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். மேலும், விண்ணப் பிக்க https://tirupurjobfair.in/ என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம். தகவல்களைத் தெரிந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரி யில் பதிவு செய்வது அவசியம். வேலைவாய்ப்பு பெற விரும்பு வோர் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள லாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தினை 0421 2999152 அல்லது 94990 55944 என்ற எண் ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.
சாலையோர வியாபாரிகளுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களை தடுக்க வலியுறுத்தல்
திருப்பூர், பிப்.7- சாலையோர வியாபாரிகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவோரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் (சிஐ டியு) சார்பில் திருப்பூர் சார் ஆட்சியரிடம் செவ்வாயன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பாலன் கொடுத்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள தாவது: திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட மற்றும் திருப்பூர் மாவட்டம் முழுவ தும் உள்ள பகுதிகளில் சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லா மல் தள்ளுவண்டியில் பழங்களை வியா பாரம் செய்து வருகிறார்கள். திருப்பூர் பல்லடம் சாலை தெற்கு உழவர் சந்தை அருகில் 100 மீட்டர் தொலைவில் சாலை யின் ஓரத்தில் பழங்களை வைத்து தின சரி காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை வியாபாரம் செய்து வருகின்றனர். தினந்தோறும் அதில் கிடைக்கும் வருமா னத்தை வைத்து வாழ்வாதரத்தையும் குடும்பத்தையும் நடத்தி வருகிறார் கள். பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமி ழகத்திலேயே திருப்பூர் தென்னம்பா ளையம் தினசரி மார்க்கெட்டும், உழவர் சந்தையும் அதை சார்ந்த சாலையோர வியாபாரமும் மிகச் சிறந்து விளங் குவதோடு, திருப்பூர் மாநகரில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் காய்கறி கள் மற்றும் பழங்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும், உழவர் சந் தையில் உள்ளூரில் விளையும் காய்கறி கள், பழங்கள் கிடைக்கும்போது சாலையோர வியாபாரிகள் வெளி மாநில காய்கறிகள், குளிர் பிரதேசங்க ளில் விளையும் பழங்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில், விவசாயிகளை பாதுகாக்கிறோம் என்று சிலர் தேவையற்ற பிரச்சாரம் செய்து, பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். உழவர் சந்தைகள் விவசாயிகள் நல னுக்காக அமைக்கப்பட்டுள்ளது போலவே,
தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க அரசியலமைப்பு சட்டம் வழி ஏற்படுத்தியுள்ளது. தெரு வோர வியாபாரத்தில் ஈடுபடும் பொழுது அவர்களை காப்பது அரசின் கடமை என்பதாலேயே 2007 ஆம் ஆண்டு நகர்ப்புற தெருவோர வியாபாரிகள் தேசியக் கொள்கை உருவாக்கப்பட் டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டம் 14 ல் (19) 1 ஜி, 39 ஏ, 39 சிபி-படி மரியாதை யான வகையில் எந்த பிரிவினரின் இடை யூறும் இன்றி வாழ சட்டம் வழிவகை செய்துள்ளது. 2014 ஆம் ஆண்டு சட்டத் தில் பிரிவுகள் இரண்டு மூன்று மற்றும் பிரிவு நான்கு குறிப்பிட்டுள்ளதை போல பெருவாரியான நகர மக்களின் சேவையை பாதுகாப்பதும், வியாபாரிக ளுக்கு இடையூறு இல்லா சூழ்நி லையை ஏற்படுத்திக் கொடுப்பதும் அர சின் முக்கிய கடமை. மேலும், எளிய வியாபாரிகள் வாழ் வாதாரம் பாதுகாப்பதும், விவசாய விளைபொருட்கள் விற்பனைக்கு முன் னுரிமை கொடுப்பதும் முக்கியமானது என்பதை எங்கள் சங்கம் முழு மன தோடு ஆதரிக்கிறது. ஆனால், விவசாயி கள் பாதுகாப்பு என்ற பெயரில் பெரும் நிறுவனங்களுக்கு துணை போகும் வகையில் காய்கறி மார்க்கெட்டிலும், சாலையோர வியாபாரிகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவோரை அடையாளம் கண்டு தடுத்திட வேண் டும். மேலும், அனைவரின் வாழ்வாதா ரமும் பாதுகாக்க அரசு நியாயமான நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிஐடியு சார்பில் பி.பாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:46.07/60அடி நீர்வரத்து:848கன அடி வெளியேற்றம்:1128கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:71.33/90அடி.நீர்வரத்து:143கனஅடி வெளியேற்றம்:318கனஅடி
இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நிறைவு
ஈரோடு, பிப்.7- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக் கான வேட்பு மனு தாக்கல் செவ்வாயன்று நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் திரு மகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டது. பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், கடந்த 31 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி யது. வேட்பு தொடங்கிய முதல் நாளில் 4 பேரும், இரண்டாம் நாள் 6 பேரும், மூன்றாம் நாள் 10 பேர் மனு தாக்கல் செய்தனர். பிப்ரவரி 3ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உள்ளிட்ட 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதன் மறுநாள் 10 பேர், திங்களன்று 13 பேர் தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி மேயர் சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இறுதி நாளான செவ்வாயன்று அதிமுக எடப்பாடி பழனிச் சாமி அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென் னரசு வேட்பு மனு தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை புதனன்று நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 10 ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் பரிதாப பலி
பொள்ளாச்சி, பிப்.7- பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம், மறையூரைச் சேர்ந்தவர் கதிரேசன். இவ ரது மகன் மதன்லால் (22) பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி யில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் உடுமலை யில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி கல்லூரி சென்று வந்தார். சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வெளியே வந்த மதன் லால் மற்றும் அவரது நண்பர் கோவையில் இருந்து பழனி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் கல்லூரி முன்பிருந்த நிறுத்தத்தில் ஏறி உள்ளார். பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் ஏறி பயணம் செய்த மதன்லால் பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பேருந் தின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில், மதன்லால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் போலீசார், மதன் லாலின் பிரேதத்தை மீட்டு பரி சோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேருந்தை பறிமுதல் செய்த கோமங்க லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
மின்தடை
நாமக்கல், பிப்.7- நாமக்கல் துணை மின் நிலையத்தில் புதனன்று (இன்று) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக் கல், நல்லிபாளையம், அய் யம்பாளையம், உத்தமபா ளையம், கொண்டிசெட்டிப் பட்டி, வகுரம்பட்டி, வசந்த புரம், வேப்பநத்தம், பெரியப் பட்டி, கொசவம்பட்டி, செல்வ கணபதி நகர், தொட்டிப் பட்டி, மணியாரம் புதூர், காவேட்டிப்பட்டி, குறிஞ்சி நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள் ளது. இதேபோல் எஸ்.வாழ வந்தி துணை மின் நிலையத் திலும் பராமரிப்பு பணிகள் புதனன்று (இன்று) நடை பெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மோகனூர், மோக னூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ் சாத்தம் பூர், எஸ்.வாழவந்தி, மணப் பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம் பாளையம், காளிபாளையம், ஆரியூர், மணியங்காளிப் பட்டி, நெய்க்காரன்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய் யப்படுகிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
உதகை, பிப்.7- கோவை மாவட்டத்திற்கு செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதி களவில் காணப்படுவதால் வாகன ஓட்டி கள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூரிலிருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம், காரமடை மற்றும் பெரியநாயக்கன்பா ளையம் பகுதிக்கு சாலை செல்கிறது. இச்சாலை 47 கொண்டை ஊசி வளைவு களைக் கொண்ட செங்குத்தாகவும், மேடு பள்ளமாகவும் இருக்கும். இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகு திகள் மற்றும் தேயிலை தோட்டம் உள்ளதால் புலி, கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகு தியில் போக்குவரத்து தடை செய்யப் பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக மாலை 6 மணியளவில் கோவையில் இருந்து மஞ்சூருக்கு செல்லும் இரவு நேர பேருந்தை அவ்வப்போது காட்டு யானைகள் வழி மறிக்கின்றன. மேலும் 2 மாத காலமாக கெத்தை பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் சாலை யில் உலா வருகின்றன. இந்நிலையில், கெத்தை மாரியம் மன் கோவில் அருகே காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஒட்டிகள் காட்டு யானைகளுக்கு இடையூறு ஏற் படுத்தும் விதமாக வாகனத்தை இயக்கி யும், புகைப்படம் எடுத்தும் தொந்தரவு செய்துள்ளனர். மேலும் வாகனத்தை முன்னும் பின்னும் இயக்கி சென்றதால் யானைகள் காரை தாக்க ஓடி வந்தன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்க ளில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த வனத்துறையினர் கூறு கையில், அவ்வப்போது பெய்து வரும் மழையால் பசுமையாக காணப்படும் வனப்பகுதியில் வனவிலங்குகள் நட மாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், காட்டு யானைகள், கரடி உள்ளிட்ட விலங்குகள் சாலைகளில் உலா வருவ தால் வாகன ஓட்டிகள் மிகவும் கவன மாக செல்ல வேண்டும். யானைகளை புகைப்படம் எடுக்கக் கூடாது. அதே போல் அதிகமாக சத்தம் எழுப்பி யானை களை அச்சுறுத்தக் கூடாது. குறிப்பாக யானைகள் சாலையில் நிற்கும் போது வாகனங்களில் சாலையை கடக்க முயற்சி செய்யக் கூடாது. யானைகள் சென்ற பின்னர் தான் சாலையை கடக்க வேண்டும். வாகனங்களில் சென்றவர்க ளின் அடையாளம் காண விசாரணை நடத்தப்படுகிறது, என்றனர்.
நாமக்கல் அரசு மருத்துவமனை திறப்பில் தாமதம்
நாமக்கல், பிப்.7- நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைப்பதில் தொடர்ந்து இழு பறியால், மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருவதில் காலதாமதமாகி வருகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள் ளது. இந்த மருத்துவக் கல்லூரிக்கான ஐந்து கட்டடங்கள் ரூ.112.32 கோடி மதிப்பீட்டிலும், மருத்துவமனைக்குரிய 9 கட்டடங்கள் ரூ.157.21 கோடி மதிப்பீட்டிலும், மருத்துவர் கள், மாணவா்கள் தங்கும் வகையிலான 8 இருப்பிட கட்டடங்கள் ரூ.69.22 கோடி மதிப் பீட்டிலும் கட்டப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை கட்டடங்கள் வாக னம் நிறுத்தும் தளம், தரைதளத்துடன் கட்டப் பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரியில் இரண் டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று கல்லூரி திறம்பட செயல் பட்டு வருகிறது. ஆனால் மாணவர்கள் பயிற்சி பெறவும், பொதுமக்களின் நலனுக்காகவும் கட்டப்பட்ட மருத்துவமனை எட்டு மாதங்க ளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வர வில்லை. இந்த மருத்துவமனைக்குத் தேவை யான 15 லட்சம் லிட்டர் குடிநீரை காவிரி ஆற் றில் இருந்து கொண்டு வருவதற்கான திட்டத் திற்கு ரூ.7 கோடி நிதி தேவைப்படுகிறது. ஆனால் அந்த நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்பு தல் கிடைத்து விட்டதாக கூறப்பட்டாலும், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படா மல் உள்ளது. இந்நிலையில், ரூ.7 கோடி நிதி மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளதாக கூறப் படுகிறது. இதற்குமேல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தகுதியுள்ள ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. அதன்பிறகு பணிகளை நிறைவு செய்ய குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆகும் என தெரிகிறது.
மாட்டுக்கறி விற்பனை - நேரடி இயக்கம்
ஈரோடு, பிப்.7- புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தையில் செயல்பட்டு வந்த மாட்டிறைச்சி கடைகள் இடிக்கப்பட்ட இடத்தில் செயல்பட அனுமதி கோரி வியாழனன்று நேரடி இயக்கம் நடை பெற உள்ளது. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி வாரச் சந்தையில், 50 ஆண்டுக ளுக்கு மேலாக செயல்பட்டு வந்த மாட்டி றைச்சி கடையை நகராட்சி எவ்வித அறிவிப் பும் இல்லாமல் இடித்து தரைமட்டமாக்கியது. இதையடுத்து, இடிக்கப்பட்ட அதே இடத் தில் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் கோரிக்கை விடுத்தது. அத்துடன் கோரிக் கையை வலியுறுத்தி போராட்டங்களும் நடை பெற்றது. இதன்தொடர்ச்சியாக, புன்செய் புளியம் பட்டி வாரச்சந்தை அருகில் வியாழனன்று சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் சார்பில், நேரடி இயக்கம் அறி விக்கப்பட்டுள்ளது. புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தையில் வியாழனன்று நடைபெறும் நேரடி இயக்கத்தில் பெரும் திரளானோர் பங் கேற்க உள்ளதாக சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள்ளது.
விஞ்ஞானி அப்துல் அஜீஸின் புதிய கண்டுபிடிப்பு
சூலூர், பிப்.7- சீமைக்கருவேல மரங்களை வாயுப் பொருளாக மாற்றும் புதிய தொழில் நுட் பத்தை கோவையில் செயல்படுத்த உள்ள தாக திண்டுக்கல் விஞ்ஞானி அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். ஜெனரேட்டர் தொடர்பான துறையில் பணியாற்றிய இவர், ஜெனரேட்டர் வெளியிடும் அதிக புகையை குறைப்பது தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியை தொடர்ந்து பல்வேறு புதிய கண்டுபிடிப்பு களை வெளியிட்டு அசத்தியுள்ளார். அறிவி யல் ஆராய்ச்சி தொடர்பான எந்த பட்டபடிப்பு களும் இல்லாத இவர், உலகிலேயே முதல் முறையாக காற்றில் உள்ள நைட்ரஜனை எரி பொருளாக பயன்படுத்தி ஒன்றிய அரசால் ரூ.5 லட்சம் அன்பளிப்பு பெற்றார். மேலும், கார்பன் - டை - ஆக்சைடை பெட்ரோலுடன் சேர்த்து இருசக்கர வாகனத்தை இயக்கி யும், நீரிலிருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சி ஜனை பிரித்து ஜெனரேட்டரை இயக்கியும், பெட்ரோலுடன் காற்றை கலந்து மூன்று மடங்கு மைலேஜ் அதிகரித்து காண்பித்து அதனை நிரூபித்தும் காட்டியுள்ளார். தற் போது ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் வாக னங்களில் மைலேஜை அதிகரிக்கும் புதிய தாவர திரவத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், கோவை வந்த விஞ்ஞானி அப்துல் அஜீஸ், சீமை கருவேல மரங்களை பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தை கோவையில் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு களில் பெரும் சவாலாக உள்ள சீமை கரு வேல மரங்களால் ஏற்படும் சூழல் பாதிப்பு களை குறைக்கும் முயற்சியாக, அதை சிலிண் டரில் அடைத்து வாயு எரிபொருளாக மாற்றும் புதிய கண்டுபிடிப்பை தாம் கண்டறிந்துள்ள தாகவும், இதுதொடர்பான ஆலையை கோவை யில் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரி வித்தார்.