திருப்பூர், ஜூன் 13 - திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் பொது நிதியில் இருந்து ஊராட்சிகளில் செய்ய வேண்டிய வேலையைத் தீர்மானிக்கும் போது அந்தந்த ஊராட்சிகளின் தலைவர் களை கலந்தாலோசனை செய்து பணி களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ஊராட்சிமன்றத் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர் ஒன்றிய கிராம ஊராட்சி தலை வர்கள் கூட்டமைப்பின் கூட்டம் செவ்வா யன்று இந்த கூட்டமைப்பின் தலைவர் இடு வாய் கே.கணேசன் தலைமையில் கணக்கம் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஒன்றிய பொது நிதியில் ஊராட்சி பகுதிக ளில் நடைபெறும் வேலைகள் குறித்து சம்பந் தப்பட்ட ஊராட்சி தலைவர்களிடம் கலந்தா லோசித்து பணிகளை தேர்வு செய்ய வேண் டும். ஊராட்சி ஒன்றியத்தில் விடப்படும் ஒப் பந்த பணிகள் குறித்த டெண்டர் வைப்பதில் ஒரு வாரத்திற்கு முன்பே ஊராட்சி தலைவ ருக்கு அதன் விவரம் தெரியப்படுத்த வேண் டும். மூன்று வருடத்திற்கு மேல் ஒரு பகுதியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை சுழற்சி முறையில் மாற்ற வேண்டும்.
திருப்பூ ரில் ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் உள்ள 120 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும். ஊராட்சி பகுதிகளில் வரன்முறைப்படுத் தப்படாத காலி மனை இடங்களுக்கு ஊர மைப்பு துறைக்கு கட்டப்படும் சதுர மீட்ட ருக்கு ரூபாய் 45 என்ற அந்த தொகையை சம் பந்தப்பட்ட ஊராட்சிக்கு வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்துவது, ஊராட்சியின் அனைத்து பணிகளும் கணினிமயம் ஆவ தால் அந்தப் பணிகளை செய்ய ஏதுவாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆண்ட் ராய்டு கைபேசியை அரசு வழங்க வேண்டும். மின்வாரிய அலுவலகங்கள் மின் இணைப்பு கொடுக்கும் பொழுது ஊராட்சியில் வழங்கப் படும் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது என்ற சான்று வழங்கிய பின்புதான் மின் இணைப்பு வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் செயலா ளர் கணக்கம்பாளையம் சண்முகசுந்தரம், மங்கலம் எஸ்.எம்.பி.மூர்த்தி, வள்ளிபுரம் முருகேசன், தொரவலூர் தேவகி, மேற்குபதி ரெஜீஸ், சொக்கனூர் சகுந்தலா, பொங்குபா ளையம் சுலோச்சனா, பெருமாநல்லூர் சாந் தாமணி, முதலிபாளையம் மயூரிபிரியா உள் ளிட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் பங்கேற் றனர்.