கோவை, பிப்.6- கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் பேருந்து நிழற் குடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியு றுத்தி சிபிஎம், சிபிஐ, திமுக உட்பட அனைத்து கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாநகராட்சி, 28 ஆவது வார்டுக்குட்பட்ட ஆவா ரம்பாளையம் பேருந்து நிலையத்தில் அமைந்திருந்த நிழற் குடை பழுதடைந்து காணப்பட்ட நிலையில், மழைக்காலத் தின்போது அருகில் இருந்த மரம் விழுந்ததினால் முழுவது மாக சேதமடைந்தது. இதையடுத்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், அதே இடத்தில் விரிவ டைந்த நிழற்குடை அமைக்க சட்டமன்ற தொகுதி நிதியில் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் நிழற் குடை அமைந்திருந்த இடத்தினை நில அளவை செய்து, சிங் காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், சிபிஎம் மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேருந்து நிழற்குடை அமைக்க கடந்த நவம்பர் மாதம் அடிக்கல் நாட்டினர்.
இதற்கிடையே, பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் இடத்தின் உரிமையாளர், அமையவுள்ள பேருந்து நிழற்குடை தங்க ளுடைய சொந்த இடத்தை மறைப்பதாக இருக்கிறது என ஆட் சேபனை தெரிவித்த நிலையில், நிழற்குடை அமைக்கும் பணி தடைபட்டது. இந்நிலையில், இடைநின்ற பேருந்து நிழற்குடை பணி களை விரைந்து முடித்துத்தர வேண்டும் என வலியுறுத்தி, திங் களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் அனைத்து கட்சியினரும் ஒன்றி னைந்து கோரிக்கை மனுவை வழங்கினர். இதில், திமுக, சிபிஎம், சிபிஐ, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண் டனர்.