districts

img

சுகாதாரப்பணியில் தனியார்மயத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

ஈரோடு, அக்.27- மாநகராட்சியில் பொது சுகாதா ரப் பிரிவில் தனியார் மயத்தை ரத்து  செய்ய வேண்டும் என தூய்மை பணி யாளர்களின் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள் ளது. ஈரோடு மாநகராட்சியில் பொது  சுகாதாரப் பணிகளை ஒப்பந்த முறை யில் தனியாரிடம் கொடுப்பதற்காக கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளி யிடப்பட்டது. இதனை அப்போதே மாநகராட்சி தூய்மைப் பணியாளர் கள் சார்பில் சிஐடியு, ஏஐடியுசி,  எல்பிஎப் உள்ளிட்ட அனைத்து  தொழிற்சங்கங்கள் ஆட்சேபணை  தெரிவித்தன. அவுட்சோர்சிங் முறை யில் தனியாரிடம் பொது சுகாதாரப் பணியை ஒப்படைப்பதால், 15 ஆண் டுகள் வரை பணியாற்றிய தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிக்கப்படும். தற்போது வாங்கும் ஊதியத்தைவிட குறைத்து வழங்கப் படும். ஆகவே தனியாரிடம் கொடுக் கும் மாநகராட்சியின் முடிவைக் கைவிட வேண்டும் என்று சிஐடியு, எல்பிஎப் மற்றும் ஏஐடியுசி உள்ளிட்ட சங்கங்கள் வலியுறுத்தின. ஆனா லும், மாநகராட்சி நிர்வாகம் தனியாரி டம் ஒப்பந்த முறையில் கொடுப்பது அரசின் கொள்கை முடிவு. இதை  எதிர்த்து வேலை நிறுத்தமும் நடை பெற்றது. இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த அம்பாய் அசோசியேட்ஸ் நிறு வனம் ஊதிய குறைப்பு நிபந்த னைக்கு தனித்தனியாக ஒப்புதல் கடி தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு  வந்தது. அத்துடன் பணி துவங்குவ தற்கு முன்பே இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் தனியார் நிறுவனத்திடம் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண் டும். உயர்நீதிமன்றம் தடை செய்த  புதிய அரசாணையின்படி சம்பள நிர் ணயம் செய்யக்கூடாது. நீதிமன்ற உத் தரவுப்படி அரசாணை (2டி) 62ன்படி ஊதியம் நிர்ணயம் செய்து 2023 ஏப் ரல் மாதம் முதல் நிலுவைத் தொகை யுடன் கொடுக்க வேண்டும். மாதம்  முடிந்த பிறகு ஊதிய பட்டியல் தயா ரிப்பின் போது தூய்மைப் பணியா ளர்களிடம் வருகை பதிவேட்டின் அடிப்படையில் ஒவ்வொரு தொழி லாளியிடமும் ரூ.50, ரூ.100 என வசூ லிக்கப்படுகிறது. இவ்வாறான விதி மீறலை கண்டறிந்தும், செய்வதற்கு யார் ஊக்கப்படுத்துகிறார்களோ அவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர் சங்க  தலைவர் எஸ்.சுப்ரமணியன், பொதுச் செயலாளர் எஸ்.மாணிக்கம், ஏஐடி யுசி சின்னுசாமி, எல்பிஎப் கோபால், கிருஷ்ணன், ஆதித்தமிழர் மாரியப் பன் உள்ளிட்டோர் ஈரோடு மாநகராட்சி  ஆணையரிடம் மனு அளித்தனர்.