districts

img

சரணாலய விரிவாக்க நீதிமன்ற உத்தரவு உதகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்

உதகை, ஜுலை. 2 -  உச்சநீதிமன்றம் பாதுகாக்கப் பட்ட வனப் பகுதியில் இருந்து வெளிவெட்டத்தை ஒரு கிலோமீட் டர் சுற்றளவிற்கு அதிகப்படுத்தப் பட வேண்டும் என்கிற தீர்ப்பு உதகை யில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அனைத்து கட்சிகள், வியாபாரி கள் சங்கம் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழக முதல்வர் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.  இவ்வமைப்பின் ஒருங்கினைப் பாளர் என்.வாசு தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற் றும் வியாபாரிகள் சங்கம், அமைப் புகள் இனைந்த கூட்டமைப்பு பின்  ஆலோசனை கூட்டம் உதகையில் நடைபெற்றது.  இதுகுறித்து தமிழக வனத் துறை அமைச்சரிடம் இக்கூட்ட மைப்பினர் அளித்த மனுவில் தெரி வித்துள்ளதாவது, உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பால் நீலகிரி மாவட்டம், கூடலுர் வருவாய் கோட்டம் மற் றும் மசினகுடி ஊராட்சி மக்கள் கதிக லங்கி உள்ள்னர். 50 கிராமங்க ளில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழ் கிறார். இதில் பெரும்பாலான மக் கள் பழங்குடி சமூகத்தை சார்ந்தவர் கள் ஆவர். பந்தலூர், கூடலூர் மற்றும் உதகை தாலுக்காக்களை சேர்ந்த 50 கிராமத்தில் வசிக்கும் மக்கள் இன்றும் விலங்குகளாலும் வனத்துறையினரின் அறிவிக்கப்ப டாத வன சட்டங்களாலும் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  மேலும், விலங்குகள் வனத்திற் குள் உணவு கிடைக்காமல் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் வந்து மக்களை தாக்குகின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் 3/6/2022 தேதியிட்ட தீர்ப்பு மேலும் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது. 

22 கிராமங்கள் உதகை தாலுக் காவிலும், 7 கிராமங்கள் பந்தலூர் தாலுக்காவிலும், இந்த விரிவாக்கத் தால் பாதிக்கப்பட உள்ளது. இதில் மசினகுடி கிராம ஊராட்சி முழுவ தும் பஃபர்சோன் ஆக அறிவிக்கப் பட்டுள்ளதால் அந்த ஊராட்சியில் வாழும் 3500 வீடுகளில் வசிக்கும் 10  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். 50 கிரா மங்களில் ஒரு லட்சம் மக்களும் 25ஆயிரம் வீடுகளும் பாதிக்கப்ப டும் அபாயம் உள்ளது. மிகக் கடுமை யாக பாதிக்கும் கூடலூர் தாலுக்கா வில் ஸ்ரீமதுரை ஊராட்சியில் 1860 வீடுகளும் 5 ஆயிரம் மக்களும் பாதிப்புக்குள்ளவார்கள். மேலும், பாட்டவயல், பிதர்காடு, முதிரக் கொல்லி, விலங்கூர், மேஃபீல்டு ஆகிய கிராமங்கள் மிக அதிகமாக  அடத்தியாக மக்கள் குடியிருக்கும்  கிராமங்கள் ஆகும். ஆகவே, உச்ச நீதிமன்றம் 3.6.2022 ஆம் தேதி இடைக்கால தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ள நீலகிரி மாவட்டம், முது மலை சரணாலய பகுதியுடன் கூடிய 50 கிராமங்களை முற்றிலுமாக சர ணாலய பகுதியுடன் உள்ள இடைப் பகுதியில் இருந்து (Buffer Zone) நீக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை வற்புறுத்த வேண்டும்.

மேலும், வழிகாட்டும் நெறிமுறையில் வருவாய் துறை யும், வனத்துறையும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், நிபுணர்களும், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுடன் உள்ளூர் கிராம சபை பிரதிநிதி யையும் உட்படுத்திய குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை கேட்டுக் கொள்ள பரிந்துரை செய்ய வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக என்.வாசு தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில் கூட லூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜயசீலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. திராவிடமணி மற் றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, பாஜக, விசிக, எஸ்டி பிஐ மற்றும் கூடலூர் அனைத்து வியாபாரிகள் சங்கம், மசினகுடி வாழ்வுரிமை இயக்கம் ஆகிய கட்சி களின் பிரதிநிதிகள் கலந்து கொண் டார்கள்.  முன்னதாக வனத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழக முதல்வரை கூடலூர் அனைத்து அரசியல் கட்சிகளின் நட வடிக்கை குழு நேரில் சந்தித்து மனு அளித்து விளக்கி கூறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண் டும் என வலியுறுத்தப்பட்டது.