districts

முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையை மேம்படுத்திடுக

மேட்டுப்பாளையம், ஜூன் 9- பெரும் முக்கியத்துவம் வாய்ந்த  மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும் என  வலியுறுத்தி அமைச்சர் மா.சுப்பிரமணி யனிடம், சிஐடியு தலைவர்கள் மனு அளித்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், சிஐ டியு மேட்டுப்பாளையம் தாலூகா பொதுத்தொழிலாளர் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனையில் உள்நோயாளிகள் மற்றும் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, மேட்டுப் பாளையம், காரமடை சிறுமுகை கல் லார், நெல்லித்துறை என்பன உள்ளிட்ட  சுற்றுவட்டார பல மலை கிராமங்களைச்  சேர்ந்த பழங்குடியின மக்கள் அதிகம்  பயன்பெற்று வருகின்றனர். அதே போன்று நீலகிரி மலைப்பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் முதலில் மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இவ்வளவு முக்கி யத்துவம் வாய்ந்த மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தேவை யான மருத்துவர்கள் மற்றும் உட்கட்ட மைப்பு வசதிகளை மருத்துவமனை மேம்பாட்டுக்காக தமிழ்நாடு நிறைவேற் றித்தர வேண்டும். அதன்படி, மருத்துவமனையில் காலியாக உள்ள எலும்பு முறிவு  சிகிச்சை மருத்துவர் பணியிடத்தை  பூர்த்தி செய்ய வேண்டும். சுமார்  ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் சிடி ஸ்கேன்  இயந்திரம் கடந்த ஆண்டு செயல்பாட் டிற்கு வந்தது. அதைப்போல் கர்ப்பிணி  பெண்களின் 20 ஆவது வாரத்தில்  குழந்தைகளின் செயல்பாட்டை தெரி யப்படுத்துவதற்கான ரேடியாலஜிஸ்ட்  (RADIOLOGIST) உள்ளிட்ட போதிய  தொழில்நுட்ப வல்லுனர்கள் பணி நிய மனம் செய்யாமல் உள்ளது. இதனால்  பொதுமக்கள் தனியார் மருத்துவம னைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு கிறது. எனவே, போதிய தொழில் நுட்ப வல்லுநர்களை பணியமர்த்த வேண்டும். மகப்பேறு மருத்துவர்கள் சில நேரங்களில் வேறு அரசு மருத்துவனைகளுக்கு செல்லுவ தால், கூடுதலாக மகப்பேறு மருத்துவர் களை பணியமர்த்துவதோடு, நிரந்த ரமாக அவர்களை பணியமர்த்த வேண் டும். ரத்த பரிசோதனை நிபுணர்கள்  குறைவாக உள்ளதால், உள் மற்றும்  வெளி நோயாளிகள் மிகவும் அவதிய டைந்து வருகின்றனர். ஆகவே, கூடுத லாக ரத்த பரிசோதனை செய்யும் நிபு ணர்களை நோயாளிகளின் வருகைக் கேற்ப பணியமர்த்த வேண்டும். நோயாளிகளுக்கு ஏற்ப செவிலியர் கள் பணியில் இல்லாததால் கூடுதலாக செவிலியர்கள், எக்ஸ்ரே, டயாலிசிஸ் உள்ளிட்ட இடங்களில் போதிய பணி யாளர்களை பணியமர்த்த வேண்டும். மேலும், 5 ஏக்கர் பரப்பளவு உள்ள மருத் துவமனையில் தனியார் நிறுவனத்தால் தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளார்கள். ஆனால், அவர்கள்  வேறு அரசு மருத்துவமனைக்கும், வேறு பணிகளுக்கு எலக்ட்ரீசியன் பிளம்பிங் உள்ளிட்ட பணிகளுக்கு பயன் படுத்துவதால் மருத்துவமனை முற்றி லும் சுகாதாரமற்ற முறையில் குப்பை கள் அகற்றப்படாமல் உள்ளது. ஆகவே நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப கூடுத லாக தூய்மைப் பணியாளர்களை பணி யமர்த்த வேண்டும். இவ்வாறு அதில்  வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக,  இந்நிகழ்வில் சிஐடியு மேட்டுப்பாளை யம் தாலூகா பொதுத்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.பாஷா  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.