திருப்பூர், ஜன.21- திருப்பூர் மாநகராட்சி 2 ஆவது வார்டு ஆத்துப் பாளையம் எஸ்பிகே கார்டனில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன் றியக்குழு உறுப்பினர் சந்தோஷ், முன்னாள் மாமன்ற உறுப் பினர் கே.மாரப்பன் மற்றும் அப்பகுதி மக்கள் வெள்ளிக் கிழமை, முதல் மண்டல உதவி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதில் கடந்த ஆறு வருடங்களாக எஸ்பி கே கார்டனில் குடியிருந்து வரும் மக்களுக்கு, கழிவுநீர் வடி கால்,சாலை, தெரு விளக்கு வசதி ஆகியன செய்து தருவதுடன், குடிநீர் குழாயையும் சீரமைத்து தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.