districts

img

திட்டமிடாத தார்ச்சாலை பணி: போக்குவரத்து நெரிசல்

நாமக்கல், ஆக.9- பள்ளிபாளையம் அருகே முறையான திட்டமிடுதல் இன்றி நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலை யில், கிராம நிர்வாக அலுவலக சாலை வழியாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் சேலம், குமாரபாளையம் சென்று வருகின்றன. திருச்செங்கோடு சாலை முற்றிலுமாக துண்டிக் கப்பட்டுள்ளதால், தனியார் காகித ஆலை சாலை வழியாக வாகனங்கள் திருச்செங்கோடு சென்று வருகின்றன. குறுகிய சாலையில் அதிகளவு வாகனங்கள் சென்று வருவதால், தார்ச் சாலைகள் அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், பள்ளிபாளை யம் காவேரி ஆர்எஸ் பிரிவு சாலை என்ற பகுதி அருகே எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாயன்று மாலை தற்காலிக தார்ச் சாலை அமைக்கும் பணியை மேம்பால ஒப்பந்ததாரர்கள் மேற் கொண்டனர். இதன் காரணமாக மிகக்குறுகிய சாலையில் வாகனங்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்துகள், கன ரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிபாளையம் காவல் துறையினர், எவ்வித முன்ன றிவிப்புமின்றி அதிக போக்குவரத்து உள்ள நேரத்தில் பொது மக்களை, வாகன ஓட்டிகளை பாதிப்படையும் செய்யும் வகை யில் பணிகளை செய்யக்கூடாது. வாகனப் போக்குவரத்து முற் றிலுமாக இல்லாத சமயத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பிற பணிகளை செய்து கொள்ளுமாறு மேம்பால ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர். இதன்பின் வாகனங் கள் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர்.