districts

ஊதியம் வழங்காத நகராட்சி: தூய்மைப்பணியாளர்கள் முற்றுகை

சேலம், ஜூன் 24- ஒப்பந்த தூய்மைப் பணியாளர் களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து ஆத்தூர் நகராட்சியை முற்றுகையிட்டு தூய்மைப் பணியா ளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் நக ராட்சியில், ஒப்பந்த முறையில் ஏராளமான தூய்மைப் பணியாளர் கள் பணியாற்றி வருகின்றனர். தற் போது வந்துள்ள புதிய ஒப்பந்ததாரர், தூய்மைப்பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வில்லை எனவும், பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தரவில்லை எனவும் குற்றம்சாட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக இபிஎப் கட்ட வேண்டும், சீருடைகள் வழங்க வேண்டும், வார விடுமுறை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.  தமிழ்நாடு அனைத்து நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குடிநீர் வழங்கள் பணியாளர்கள் சங்கத் தின் மாநிலத் தலைவர் பார்வதி தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் கிளைச் செயலாளர் முனியன் அனைத்து சங்க கூட்டமைப்பு நிர்வாகி கலைமணி உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர்.