districts

img

வேளாண் பல்கலை., மாணவர்களுக்கு உகாயனூர் ஊராட்சியில் அனுபவப் பயிற்சி

திருப்பூர், ஜன.4- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் பதினொரு பேர் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் உகாயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் கிராமப் புற வேளாண்மை அனுபவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யின் கீழ் இயங்கும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத் தோடு இணைந்து வேளாண் கல்லூரி மாணவர்கள், திருப்பூர் மாவட்டம், உகாயனூர் ஊராட்சியில் உள்ள நல்லகாளி  பாளையம் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்து  மண்வள அட்டை வழங்கினர். இதில் 20 விவசாயிகள் கலந்து கொண்டு மண் பரிசோதனை செய்து கொண்டனர். அத்துடன்  உகாயனூர் ஊராட்சியில் உள்ள பொல்லிகாளிபாளையம்  கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ப.தாமோதரனை சந்தித்து சிறு வெங்காயம் சாகுபடி, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வாழையில் இயற்கை முறை பயிர் சாகுபடி குறித்த விவ ரங்களைக் கேட்டு அறிந்தனர். ளவிவசாயி ப.தாமோதரன் தமது 4 ஏக்கர் நிலத்தில் திசு  வளர்ப்பு மூலம் உற்பத்தி செய்யப்படும் ஜி9 ரகத்தைப் பயிரிட் டுள்ளார். வாழையில் அவர் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மண்வள மேம்பாட்டிற்கு இயற்கை முறை உரங்களான பசுந்தாள் உரம், மாட்டு எரு, கோழி எச்சம் ஆகியவற்றையே சார்ந் துள்ளார்.  இவர் தனது தோட்டத்தில் ஜீவாமிர்த கரைசலை தயார்  செய்து வாழை மற்றும் முசுக்கொட்டைப் பயிர்க்கும் பயிர்  ஈட்டு இடுபொருளாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கி றார். தன்னுடைய தோட்டத்தில் கூடுதல் வேளாண் முயற்சி யாக பட்டுப்புழு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றார். வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் விவசாயி ப.தாமோதரனின் பயிர் சாகுபடி முறைகளை ஆர்வத்துடன் கேட்டு அறிந்து கொண்டதோடு அவரது தோட்டத்தில் சிறு  வெங்காய நடவிலும் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.