districts

img

கோவையின் தனித்துவ அடையாளம் ”செம்மொழி பூங்கா”

கோவை, டிச.19- கோவை மாநகரின் தனித்துவ அடையாளமாக செம்மொழி பூங் காவை அமைப்பதற்கான நடவடிக் கைகளில் அரசு தீவிரமாக செயல் பட்டு வருவதாக தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். கோவையில், திங்களன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல்லை நாட் டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன் பணிகளை தொடங்கி வைத் தார். இந்நிலையில், செம்மொழி பூங் காவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற உள்ளன என்பது தொடர் பாக, கோவை மாவட்ட தோட்டக்க லைத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். அதில், கோவை மாநக ரில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்ப ளவில் ரூ.133.21 கோடி மதிப்பில் செம் மொழி பூங்கா அமைய உள்ளது. இது மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் இயற்கையை பாது காப்பது, சுற்றுச்சூழல் மேலாண் மையை நிலைநிறுத்துவது உள் ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமையும். செம்மொழி பூங்காவில் பிரத் யேக அம்சமாக செம்மொழிவனம், மகரந்தவனம், மூலிகைவனம், நீர்வ னம், நட்சத்திரவனம், நலம்தரும் வனம், நறுமணவனம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. மேலும் நீலகிரி தாவரவியல் பூங்கா போல  செம்மொழி பூங்காவிலும் ரோஜாத் தோட்டம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுத விர செம்மொழி பூங்காவில் இயற்கை அருங்காட்சியகம், திறந்த வெளி அரங்கு, இயற்கை உணவ கம், 1000 பேர் அமரும் வகையில் மாநாட்டு மையம், சிறுவர் விளையா டும் பொழுதுபோக்கு மையம், நர்சரி தோட்டம், பாறைத்தோட்டம் ஆகிய அம்சங்களும் இடம்பெற உள்ளன.  இங்கிலாந்து நாட்டின் தென் மேற்கு லண்டனில் உள்ள கியூ பூங்கா, உலகின் முதல் தாவர உயிரி யல் வங்கி மற்றும் ஆராய்ச்சி மையம்  ஆகும். அதன்பிறகு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முதல் முறையாக கோவை செம்மொழி பூங்காவில் மேற்கண்ட அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேலும் கோவை மாநகரின் தனித்துவ அடை யாளமாக செம்மொழி பூங்காவை  அமைப்பதற்கான நடவடிக்கை களில் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.