திருப்பூர், ஜன.10 – அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்திய ஜவுளி விற் பனை மந்தமடைந்திருக்கும் நிலை யில் ஆஸ்திரேலியா மற்றும் ஐக் கிய அரசு நாடுகளில் புதிய சந்தை வாய்ப்பைத் தேடுவதாக ஒன்றிய அரசின் ஜவுளித்துறைச் செயலர் ரச்னா ஷா கூறியிருக்கிறார். செவ்வாயன்று புது டில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டிய ளித்த ரச்னா ஷா: ஜவுளித் துறை யில் இருக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறோம். குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுக ளில் இந்திய ஜவுளிகளுக்கான கேட்பு (டிமாண்ட்) குறைந்திருப் பது மற்றும் இந்தியாவிற்குள் பிற நாடுகளின் ஜவுளிகள் கட்டுப்பாடு இல்லாமல் வந்து குவிந்து கொண் டிருப்பது ஆகிய பிரச்சனைகளை கவனித்து அதற்கு உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகி றது. குறிப்பாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்திய ஜவு ளிகளுக்கான கேட்பு குறைந்து வரு கிறது.
இந்த சந்தைகளில் நம் ஜவுளி விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதுடன், புதிய சந்தைகளைத் தேடி வருகிறோம். குறிப்பாக இங்கிலாந்துடன் வரி யில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்ப டுத்த தொடர்ந்து பேச்சு நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆஸ்திரே லியா, ஐக்கிய அரபு நாடுகள் உள் ளிட்ட மேற்காசிய நாடுகளுடனும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய் வதற்கு பேச்சுவார்த்தை நடைபெ றுகிறது என்றெல்லாம் அளந்து விட் டார். அதேசமயம் இந்திய ஜவுளி உற் பத்தியாளர்களுக்கு உரிய தேவை களை நிறைவேற்றுவது, சலுகை கள் வழங்குவது குறித்தோ அவர் எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக இந்திய ஜவுளித் துறையின் போட் டித்தன்மை, சரக்குப் போக்குவ ரத்து அனுப்பும் பிரச்சனை, மதிப் புக் கூட்டுதல் ஆகியவை இந்தியா முழுவதும் உள்ள பிரச்சனையாக உள்ளது. அதற்கு சில சலுகை களை வழங்குவதாக தெரிவித் தார். வரைமுறையற்ற இறக்குமதி இந்திய ஜவுளித் தொழில் துறை யில், பிற நாடுகளில் இருந்து, குறிப் பாக, சீனா மற்றும் வங்கதேசத்தில் இருந்து எவ்வித கட்டுப்பாடும் இல் லாமல் ஜவுளி இறக்குமதி ஆவதால் உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர் கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனை குறித்து பதிலளித்த ரச்னா ஷா, இறக்குமதியை “கண்காணித்து” வருவதாகக் கூறினார். குறிப்பாக உள்நாட்டு சிறு, குறு, நடுத்தர ஜவுளி உற்பத்தியா ளர்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் ஜவுளி அள வைக் கட்டுப்படுத்த வேண்டும் அதற்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதைப்பற்றி எதுவும் சொல்லாத ரச்னா ஷா, வெறுமனே கண்கா ணித்து வருவதாக மட்டும் கூறியி ருப்பது கவனிக்கத்தக்கது. வெளி நாட்டில் இருந்து வரும் தரமில்லாத ஜவுளி ரகங்களைக் தடுத்து தர மான ஜவுளி துணிகள் வருவதை உறுதி செய்யப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
குறிப்பாக ரிலையன்ஸ் உள் ளிட்ட மிகப்பெரும் சங்கிலித் தொடர் விற்பனையகங்கள் வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மலிவு விலையில் ஆடை களை கொள்முதல் செய்து இந்திய சந்தையில் விற்பனை செய்கின்ற னர். அத்துடன் இந்தியாவின் பெரும் கார்ப்ரேட் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும், அங்கிருந்து நேர டியாக துணிகளை வாங்கி இங்கு விற்று ஆதாயம் அடைகின்றனர். இறக்குமதி கட்டுப்பாடு விதித் தால் இந்த மிகப்பெரும் கார்ப் ரேட் நிறுவனங்கள் ஜவுளி மற்றும் துணி வகைகளை கொள்முதல் செய்வது பாதிக்கும். எனவேதான் இறக்குமதியை, கட்டுப்படுத்துவது பற்றிக் கூறாமல், கண்காணித்து, “தரமில்லாத” ஜவுளி வருகையை தடுக்கப் போவதாக கூறியிருக்கி றார். இப்படிச் செய்வதன் மூலம் கார்ப்ரேட் நிறுவனங்கள் பலன டைய முடியும், தரமில்லாத ஜவுளி வகைகள் என்று சொல்லி, சிறு, குறு ஜவுளி விற்பனையகங்கள் போட்டியிடுவதும் தவிர்க்கப்படும். இது மோடி அரசு கடைப்பிடித்து வரும் கார்ப்ரேட் ஆதரவு தாராள மயக் கொள்கையின் வெளிப்பாடு ஆகும். இதனால் உள்நாட்டு சிறு, குறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப் படுவதை அவர்கள் பொருட்படுத்த வில்லை என்பதும் தெளிவாகிறது. மொத்தத்தில் இந்திய ஜவுளி ஏற் றுமதியை வலுப்படுத்தி விரிவாக் கவும், வரைமுறையற்ற இறக்கும தியை கட்டுப்படுத்தவும் ஒன்றிய அரசு உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கப் போவதில்லை என்பதை ஒன்றிய அரசின் கொள் கைகளைத் தீர்மானிக்கும் இடத் தில் இருக்கும் உயர் அதிகாரியான ரச்னா ஷாவின் பேட்டி உறுதிப்ப டுத்தி உள்ளது.