சேலம், பிப்.17- கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 800 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக, சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான வெங்கடாஜலம் மீது, அதிமுக ஒன்றியச் செயலாளர் ஏ.வி.ராஜூ குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் அர சியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. சேலம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக செயலாளராக இருப்பவர் ஏ.வி.ராஜூ. இவர் 1988 ஆம் ஆண் டிலிருந்து அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வரு கிறார். கடந்த 1993 முதல் 2003 வரை சேலம் ஒன்றியச் செயலாளர் ஆக இருந்தார். இதன்பின் சேலம் ஒன்றி யத்தின் தலைவராக இவருடைய மனைவி பதவி வகித்து வந்தார். இந்நிலையில், 2017 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, சேலம் ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு, சேலம் மேற்கு ஒன்றியச் செயலாளராக மீண்டும் பழனிசாமியால் ராஜூ நிய மிக்கப்பட்டார். இந்நிலையில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கக்கூடிய, முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. வெங்கடாஜலம், கடந்த 10 ஆண்டு களில் 800 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வாங்கி குவித் துள்ளதாக ஏ.வி.ராஜூ கூறிய குற் றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் புயலைக்கிளப்பியுள்ளது. இதுகுறித்து, ஏ.வி.ராஜூ செய்தி யாளர்களிடம் கூறுகையில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாள ராக கடந்த 10 ஆண்டுகளாக உள்ள வெங்கடாசலம் ஒரு சாதாரண குடும் பத்தில் பிறந்து, சேலம் புது ரோடு பகுதியில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். அப்பொழுது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 41 லட்சம் ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்திருந் தார். இதனைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதி யில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெங்கடாஜலம், தனக்கு ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் சொத்து இருப்பதாக தெரி வித்தார். இதன்பின் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் மூன்று கோடி அளவில் சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவரு டைய சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 800 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. அவ ருக்கு சொந்தமான தற்போதுள்ள வீடு மட்டும் 10 கோடி ரூபாய் மதிப் பாகும். இது மட்டுமில்லாமல் பண் ணப்பட்டியில் 123 ஏக்கர் விவசாய நிலம், செம்மண் கூடல் பகுதியில் 7 ஏக்கர் விவசாய நிலம், வட்டக்காடு பகுதியில் 32 ஏக்கர் தென்னந் தோப்பு, பனங்காடு பகுதியில் 10 ஆயிரம் சதுர அடி காலி நிலம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடம், கரூரில் 20 ஏக்கர் விவசாய பண்ணை இடம்,
சென்னை கொட்டி வாக்கம் பகுதியில் பினாமி பெயரில் மூன்று வீடுகள், வாழப்பாடி – வேலூர் செல்லும் வழியில் 5 ஏக்கர் நிலம், ஏற்காடு பகுதியில் 15 ஏக்கர் எஸ்டேட், இரும்பாலை முல்லை நகர் பகுதியில் 16 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் 7 பேருந்துகள், 6 பெட்ரோல் பங் குகள் என சொத்து மதிப்பு 800 கோடியை தாண்டியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது, 2019 ஆம் ஆண்டில் என் உற வினருக்கு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதா கக்கூறி 30 லட்ச ரூபாய், சத்துணவு துறையில் இரண்டு பேருக்கு வேலை வாங்கி தருவதாக 10 லட்சம் ரூபாய், தொழில் விசயமாக 20 லட்ச ரூபாய் என 60 லட்ச ரூபாய் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழ னிச்சாமியிடம் புகார் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. அதிமுக மாநகர் மாவட்டச் செயலா ளர் வெங்கடாசலம் மீது அமலாக் கத்துறை நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றார். மேலம், வெங்கடாச லம் அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியில் நீடித்தால், வரும் நாடா ளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்திக்கும் என்றார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மீது, அதேகட்சியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் வைத் துள்ள குற்றச்சாட்டு சேலத்தில் மட் டுமல்லாமல், அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.