districts

img

கிராமப்புற வேலை திட்டத்தை சிதைத்த ஒன்றி ய மோடி அரசு

நூறுநாள் வேலை உறுதியளிப்பு திட் டத்தை நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தி, வேலை நாட்களை 200 நாட்கள் உயர்த்தி கூலியை ரூ.600 தர வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது. ஆனால், ஒன்றிய மோடி அரசு, நூறுநாள் வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கும் நிதியை குறைத்து உள்ளது. மேலும், நூறு நாட்கள் வேலை திட்டத்தை சிதைத்து வருகிறது

பூங்கொடி – எழுத்தாளர்

ஒன்றிய அரசின் கொள்கைகள் மக்களை இன ரீதியாக பிரிக்கும் நடவடிக்கையால் நாட்டை பின் நோக்கி செல்லும் வகையில் உள்ளது. அறிவியிலை புராண கதைகளுடன் இணைத்து பேசுவது அரசின் கொள்கையாக மாற்றியது போல் பிரதமர் உள்ளிட்ட அனைத்து ஒன்றிய அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை  நடந்து கொள்கின்றனர். மக்களை சாதி  மற்றும் மத ரீதியாக பிரிக்கும் நடவடிக்கை யாக உள்ளது. புராண கதைகளை வரலாறு போல் கட்டமைக்கும் முயற்சியை தடுக்க வேண் டும்.

புவனேஸ்வரி – குடும்ப தலைவி

மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின் கடந்த ஒன்பது ஆண்டுகள் மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் உணவுப் பொருட்கள் மற்றும் சிலிண் டர் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மேலும் அரிசி மற்றும் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிபின் மூலம், இந்த அரசு மக்களுக்கு ஆன அரசு இல்லை  என்பது தெரிகிறது.

சுமித்ரா – ஐடி ஊழியர்

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கும் என்று வாக்குறுதி தரப்பட்டது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின் இதுவரை பல லட்சம் இளை ஞர்கள் வேலைகளை இழந்து உள்ளார்கள். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் இளைஞர்களை திண்பண்டம் விற்பனை செய்ய சொல்வது ஒன்றிய அரசுக்கு அழகல்ல…

தாமோதரன் – மளிகைக்கடை உரிமையாளர்

ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் கடந்த ஆண்டு வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்பது தினமும் அதிகரித்த காரணத்தால் மக்கள் அன்றாடம் பயன்படுத் தும் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந் தது. மேலும்  பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி  விதிப்பால் நிலையில்லாத விலை உள்ளதால் சிறிய அளவிலான கடைகளில் விற்பனை மிக வும் பாதிக்கப்பட்டுள்ளது.

மகேந்திரன் – விவசாயி

வெளிநாட்டு நிறுவனங்களின் தரம் இல் லாத விதை இறக்குமதியால் விளைநிலங்க ளில் விளைச்சல் குறைவாகவும், இடு பொருட் களின் விலை அதிமாக உள்ளதால் விவசாயி களின் நிலை பரிதாபமாக உள்ளது. ஒன்றிய அரசு விவசாயிகளின் நலனை பாதிக்கும் வகை யில், மின்சார சட்டத்தை நடைமுறைப்படுத்த அதிக கவனம் செலுத்துவதால், அதிகளவில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

யுவராஜ் – தனியார் வங்கி ஊழியர்

நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, வங்கிகள் வழங்கிய கடன்களை வராக் கடனாகவும், தனி நபர் மற்றும் விவசாயிக ளுக்கு வழங்கிய கடன்களை மனசாட்சி இல்லா மல் வசூல் செய்ய எங்களை பயன்படுத்துகி றது. இது கந்து வட்டி கொடுமை போல் உள்ளது. மேலும், பணத்தை வசூல் செய்ய இலக்கு நிர் ணயம் செய்வதால் அதிக நேரம் வாகனங்க ளில் தான் செல்ல  வேண்டும். தற்போது கடந்த ஆட்சியின் போது இருந்த பெட்ரோலின் விலையை விட மூன்று மடங்கு அதிகம், நாங் கள் வாங்கும் சம்பளம் வாகனங்களுக்கு பெட் ரோல் நிரப்பவே சரியாக இருக்கும்.

நடராஜ் – கட்டட தொழிலாளி க

ட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக வாரத்தில் பாதி நாட்கள் மட்டுமே வேலை கிடைப்பது அரிதாக உள்ளது. இதில் குடும்பம் நடத்த முடியாத நிலையில், கடுமை யான விலைவாசி உயர்வால் எங்களின் வாழ்க்கை நிலை பாதிப்படைந்து உள்ளது.

ஜெகதீசன் – சிஐடியு

ஒன்றிய பாஜக அரசு தொழிலாளர் விரோத நடவடிக்கையால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளார்கள். எந்த வேலை யும் பாதுகாப்பு இல்லை. அரசே தனியார் நிறு வனம் போல் ஆட்களை வேலை செய்ய நிர் பந்தம் செய்வதால், தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சட்ட சலுகைகளை தர மால் கொத்தடிமை போல் வேலை வாங்கு கிறார்கள். வேலையின்மை, விலைவாசி உயர் வால் தொழிலாளர்களின் வாழ்நிலை கேள்விக் குறியாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு துறையை தானியாருக்கு தாரை வார்த்த ஒன்றிய அரசு ஒட்டு மொத்த மக்களின் நலனை பாதுக்காமல் சில பெரிய நிறுவனங்களை பாதுகாத்து வரு கிறது.

முத்து வேலப்பன் – விவசாய தொழிலாளி

கிராமங்களின் வாழ்வாதாரமாக இருந்த நூறு நாட்கள் வேலை திட்டத்தின்படி எந்த பகுதி யிலும் வேலை தருவது இல்லை. அதிகாரி களிடம் கேட்டால், ஒன்றிய அரசு நிதி வழங்க வில்லை. இதனால் குறைந்த நாட்கள் மட்டுமே வேலை தர முடியும் என்பதால் வருடத்தில் குறைந்த நாட்களே வேலைக்கு செல்ல முடி கிறது. அப்படி வேலைக்கு சென்றாலும் கூலி  உரிய நேரத்தில் வருவது இல்லை. ‘‘படி அளப் பேன் என்று பாராள வந்தவன், தடி எடுத்தானடி முத்தம்மா’’ என்ற சினிமா பாடல் போல்  அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிய மோடி அரசு கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது.

–மகாதேவன், உடுமலை.