கோவை, அக்.18- சிறுபான்மை நல துறைக்கு ஒன்றிய அரசு வழங்கி வந்த நிதி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி நலத்திட்டங்களை வழங்கி வருகிறது என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளி நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கோவையில் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அதி காரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர் களிடம் கூறியதாவது, சிறுபான்மை நலத் துறை சார்பில் மாவட்ட மக்களின் தேவை களை கேட்டறிந்து, ஆட்சியர் மூலம் நலத் திட்டங்கள் வழங்கி வருகிறோம். கோவை யில் புதனன்று 224 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரம் உயர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. கோவையில் இஸ்லாமியர்களுக்கான கல்லறை வசதிசெய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இஸ்ரேலில் படித்து கொண்டிருந்தவர்கள் பாதுகாப்பு கருதி வந்துள்ளார்கள். தமிழக அரசு சார்பில் விருப்பத்தின் அடிப் படையில் 132 பேரை அழைத்து வந்துள் ளோம். அவர்களுக்கு உணவு, வாகன வசதி செய்து தந்து இல்லம் செல்லும் வரை உதவி செய்துள்ளோம். அவர்கள் மீண்டும் இஸ்ரேல் சென்று படிப்பு மற்றும் வேலை களை தொடர வாய்ப்புள்ளது. இஸ்ரேலில் இருந்து வந்தவர்களின் கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன். சிறுபான்மை நலத் துறைக்கு, தமிழக முதல்வர் நிதி கூடுத லாக ஒதுக்கீடு செய்துள்ளார். இதனால், சிறு பான்மை மக்களுக்கு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறோம். ஒன்றிய அரசு வழங்கி வந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு 60 சதவிகிதம், தமிழ்நாடு அரசு 40 சதவிகிதம் என திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறோம் என தெரிவித்த அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கூடுதல் திட்டங் களை கேட்டு பெற்று தருவோம் என்றார்.