சிபிஎம் ஆர்ப்பாட்டம் தருமபுரி, அக்.8- நியூஸ் கிளிக் இணைய இதழ் நிறுவனம் மீதான ஒன்றிய அரசின் தாக்குதலை கண் டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஊழல் மோசடிகள், இந்துத்துவா வெறுப்பு அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் நியூஸ் கிளிக் இணைய இதழ் நிறுவனத்தை தில்லி அலுவலகத்திற்கு சீல் வைத்து, மோடி அரசு எதேச்சதிகாரத்தை அரங்கேற்றியுள் ளது. மேலும், அந்த செய்தி நிறுவனம் மீது ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்யப் பட்டு, அந்த ஊடகத்துடன் தொடர்புடைய பத் திரிகையாளர்கள் மற்றும் அவர்கள் சம்பந் தபட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப் பட்டது. கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் மோடி அரசு பல்வேறு ஊடகங்களை ஒடுக்கு வதற்கும், அடக்குவதற்கும், முடக்குவதற் கும் தனது விசாரணை அமைப்புகளை ஏவி யுள்ளது. அதிகாரத்திற்கு எதிராக உண் மையை உறைக்கும் ஊடக நிறுவனங்கள் மற் றும் பத்திரிகையாளர்கள் மீதான இத்தகைய பெருமளவிலான எதேச்சதிகார தாக்குதலை கண்டித்து பல்வேறு ஊடகத்தினர் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். மேலும், ஊடகங்கள் மீதான ஒன்றிய பாஜக அரசின் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம் ஆகியவை ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் தலைமை வகித் தார். இதில் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரி முத்து, வி.மாதன், எம்.முத்து, எஸ்.கிரைஸா மேரி, ரவி, ஆர்.சின்னசாமி, ஒன்றியச் செயலா ளர்கள் தருமபுரி என்.கந்தசாமி, பாலக்கோடு டி.எஸ்.ராமச்சந்திரன், காரிமங்கலம் பி.ஜெய ராமன், சின்னம்பள்ளி சக்திவேல், பாப்பி ரெட்டிப்பட்டி தி.வ.தனுசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.பூபதி, சி.ராஜி, டி.ஆர்.சின்னசாமி, கே.ஆர்.சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.