ஈரோடு, ஏப். 14- ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வாக்கு சேகரித்தனர். ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியி டும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆத ரவு தெரிவித்து சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எம்எல்எப் மற்றும் எல்எல்எப் ஆகிய தொழிற்சங்கங்களின் சார் பில் அக்ரஹாரம் வண்டிபேட்டையில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர். இதற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எஸ். சுப்ரமணியன் தலைமை வகித்தார். அசோ கபுரம், வைராபாளையம், கிருஷ்ணம்பாளை யம், திருநகர் காலனி, காந்தி சிலை, கிருஷ்ணா தியேட்டர், சம்பத் நகர், பெரிய வலசு, நாராயண வலசு மற்றும் அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில் தொமுச சார்பில் எஸ்.கோபால், க.ப. ஆறுமுகம், ரவிச்சந்திரன், எச்.எம்.எஸ் சார்பில் மனோகரன், சிஐடியு சார்பில் எஸ்.கிருஷ்ணன் மற்றும் வை.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.