திருப்பூர், பிப்.16- விசைத்தறி நெசவுக் கூலி தொடர்பாக இருதரப்பு புரிந் துணர்வு ஏற்படுத்தப்பட்டதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையா ளர்கள் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சோமனூர் ரகத்துக்கு 23 சதவிகி தம், பல்லடம் ரகத்துக்கு 20 சத விகிதம் கூலி உயர்வு வழங்கு வதாக ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் அமைச்சர், ஆட்சியர் முன் னிலையில் ஒப்புக் கொண்ட நெசவுக் கூலி உயர்வை வழங்கா மல் ஜவுளி வியாபாரிகள் பழைய கூலியை கொடுத்து வந்த நிலை யில் இந்த போராட்டம் தொடங் கப்பட்டது. 37 நாட்களாக இந்த போராட் டம் வெற்றிகரமாக தொடர்ந்து வந்த நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் அண்மை யில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியதில் பல்லடம் ரகத்துக்கு 15 சதவிகிதம், மற்ற ரகங்களுக்கு 19 சதவிகிதம் என கூலி உயர்வு வழங்க ஜவுளி வியாபாரிகள் தரப் பில் ஒப்புக் கொண்டனர். ஆனால் முறைப்படி இந்த உயர்வை ஒப் பந்தமாக நிறைவேற்றி கையெ ழுத்திட அவர்கள் மறுத்துவிட்ட னர். இதையடுத்து கடைசி கட்டத் தில் சுமூக நிலை ஏற்படுவது முறிந் தது. எனவே அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விசைத்தறி யாளர்கள் கூடிப் பேசினர். சட்டப் படி முறையான கூலி உயர்வு ஒப் பந்தம் நிறைவேறும் வரை கால வரையற்ற தொடர் உண்ணாவிர தப் போராட்டத்தை நடத்தப் போவ தாகவும் அவர்கள் அறிவித்தனர். இந்நிலையில் மங்கலம் அருகே சுல்தான்பேட்டை அம்மன் திருமண மண்டபத்தில் புதனன்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற் றும் ஜவுளி வியாபாரிகள், விசைத் தறியாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதன் முடி வில் வெளியிடப்பட்ட அறிக்கை யில், விசைத்தறியாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களின் நலனை மனதில் கொண்டும், இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து ஜவுளித் தொழிலைப் பாதுகாத்து தொடர்ந்து இயக்கிட அமைச்சர் கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இரு தரப்பினரிடமும் கலந்து பேசி னர். அதில் முந்தைய 2021 பேச்சு வார்த்தை முடிவில் இருந்து மாறு தல் செய்து பல்லடம் ரகங்களுக்கு 15 சதவிகிதம், மற்ற ரகங்களுக்கு 19 சதவிகிதம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இத் தொழில் நிலைமை சீரானவுடன் நான்கு மாதங்களுக்குப் பின்பு பேசி முடிவு செய்து மீதி உள்ள கூலியில் பல்லடம் ரகத்துக்கு 5 சதவிகிதம், மற்ற ரகங்களுக்கு 4 சதவிகிதம் வழங்குவது குறித்து இருதரப்பும் உறுதி செய்து கொள் வது என அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் பல்ல டம், மங்கலம், 63 வேலம்பாளை யம், கண்ணம்பாளையம் சங்கத்தி னரும், ஜவுளி வியாபாரிகள் தரப் பில் பல்லடம், சோமனூர், அவி நாசி, திருப்பூர் பகுதியினரும் கலந்து கொண்டதாக கூறப்பட் டுள்ளது. அதேசமயம் கோவை, திருப் பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பினர் இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக சோமனூர் சங்கத் தலைவர் பழனிசாமி இந்த பேச்சு வார்த்தை குறித்தும், முடிவு குறித் தும் எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை, தெரிவிக்க வில்லை என்றும், தமிழக முதல் வர் இப்பிரச்சனையில் உரிய முடிவு காண வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர் சங்கத் தலைவர் வேலுச்சாமியை தொடர்பு கொள்ள முயன்றபோது சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் முடி வில் எங்கள் நிலைபாடு தெரி விக்கப்படும் என்று அவர்கள் தரப் பினர் கூறினர். எனவே, அமைச்சர் முன்னி லையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்து ணர்வை ஏற்று வேலை நிறுத் தத்தை முடித்துக் கொள்வதா அல்லது எழுத்துப்பூர்வ ஒப்பந் தம் ஏற்படுத்த தொடர்ந்து போரா டுவதா என்பது தெரியாமல் விசைத் தறியாளர்கள் குழப்பமான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.