உடுமலை, டிச.29- உடுமலை அருகே கோவில் வளாகத்தி லிருந்த சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, பள்ளபாளையம் ஊராட்சி, கொங்கலக் குறிச்சி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் வளர்ந்திருந்த சந்தன மரத்தை சனியன்று இரவு அடையாளம் தெரி யாத நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ள னர். உடுமலை - மூணாறு சாலையில் அதிக போக்குவரத்து இருக்கும் இப்பகுதியில், சந் தன மரங்களை வெட்டி எடுத்து சென்ற சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உடுமலை ஒன்றியச் செயலாளர் எஸ். ஜெகதீசன் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியாக இருக்கும் இப் பகுதியில், தொடர்ந்து சந்தன மரங்கள் கடத் தப்படுவது தொடர் கதையாக உள்ளது. தளி மற்றும் அமராவதி நகர் காவல் நிலைய எல் லைகளில் தான் தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தோட்டத்து சாலைகளில் திருட்டு சம்பவங்கள் அதிக ரித்து வருகிறது. எனவே, பொதுமக்களின் பயத்தை போக்கும் வகையில் இரவு நேரங்க ளில் காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். பொது மக்கள் கொடுக்கும் புகார்களை உரிய முறை யில் விசாரணை செய்ய வேண்டும். சந்தன மரங்கள் வெட்டப்பட்ட இடம் சமூக விரோதி கள் மது அருந்துதல் இடமாக மாறியுள்ளதை தடுக்க வேண்டும் என பலமுறை புகார ளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத இச் சம்பவத்திற்கு காரணமாகும். எனவே, உடன டியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண் டும், என்றார்.