districts

img

உடுமலை அரசுக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

உடுமலை, அக்.4- உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரி மாண வர்கள், மதிப்பெண் தவறாக வழங்கியதை மாற்றித்தரக் கோரி வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி முதல்வர் அறையை முற்றுகையிட்டு புதனன்று போராட்டம் நடத் தினர். உடுமலை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறி வியல் துறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இரண்டாம் பருவ  தேர்வில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் தவறாகவும், மாண வர்கள் பெற்ற மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதை பல  முறை மாற்றித்தர விண்ணப்பம் தரப்பட்டும் இதுவரை எவ்வித  நடவடிக்கையும் எடுக்காததால், மாணவர்கள் வகுப்புகளைப்  புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அத்துடன் கல்லூரி  முதல்வர் அறையை முற்றுகையிட்டு மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த ஆண்டு இறுதியில் மாணவர் களின் படிப்பு முடிவதால் நிர்வாகம் தவறாக தந்த மதிப் பெண்களை மாற்றி தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.