கோவை, மார்ச் 6- தேர்தல் நேரத்தில் மட்டும்தான் வெளியே வருவார்கள். மற்ற நேரத்தில் உள்ளே சென்று விடுவார்கள். யாருடைய காலிலும் விழாதீர் கள், சுயமரியாதையோடு வாழுங்கள், அதி முக, பாஜக போல இருக்காதீர்கள் என கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தியது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வரு மான மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் சின்னியம்பாளையத் தில் 88 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை ஏற்றார். திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டா லின் திருமணத்தை நடத்தி வைத்தார். இதன் பின் மணமக்களுக்கு ஒரு லட்சம் மதிப்பி லான 70 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில். திமுக மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், கோவை மாநக ராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் உள் ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.
அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பேசுகையில், இங்கு நடந்தது சுய மரி யாதை திருமணம். யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அப்போது இந்த திரும ணத்தை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதற்கு அங்கீகாரம் கொடுக்க வலியுறுத்திய வர் பெரியார்; முன்மொழிந்தவர் அண்ணா. அதனால் தான் கலைஞரைத் தொடர்ந்து முதல்வரும் சுயமரியாதை திரு மணத்தை நடத்தி வருகின்றார். மணமக் களே! அதிமுக, பாஜக போல் இருக்காதீர் கள். யாருடைய காலிலும் விழாதீர்கள். காலில் விழுந்தவர்கள் நிலைமை என்ன என்று தெரி யும். சிலர், தேர்தல் வரும்போது தான் வெளியே வருவார்கள். தேர்தல் முடிந்ததும் உள்ளே சென்று விடுவார்கள். பிரச்சனை என் றால் வெளியே வருவார்கள். அதிமுக, பாஜக வினர் மக்களை சந்திக்க மாட்டார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் வந்தார்கள். அடுத்த 8 மாதங்களுக்கு வரமாட்டார்கள். மீண்டும் நாடாளுமன்ற தேர்தலின்போது மட் டும் தான் வருவார்கள். நாங்கள் தற்போது தேர்தல் நடைபெறாத நேரத்தில் கூட மக் களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். நாங்கள் மக்களோடு இருந்து மக்களுக்காக பணி செய்வோம். எனவே, நீங்கள் இந்த அரசுக்கு எப்போதும் துணை இருக்க வேண்டும், என்றார்.