districts

img

மக்களுடன் முதல்வர் திட்டம்: சேலத்தில் உதயநிதி துவக்கி வைத்தார்

சேலம், டிச.18- சேலத்தில் மக்களுடன் முதல் வர் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து, மனுக் கள் மீது உடனடியாக பரிசீலினை செய்யப்பட்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில், “மக் களுடன் முதல்வர்” திட்டத்தினை, இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் திங்களன்று துவக்கி வைத்தார். இதன்பின் செய் தியாளர்களிடம் பேசுகையில், அர சின் சேவைகள் பொதுமக்களை  விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில் கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “மக்களு டன் முதல்வர்” திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் கண்டறியப்பட்டு, அத்துறைகள் சார்ந்த கோரிக்கை களை பொதுமக்கள் எவ்வித சிரம முமின்றி ஒரே இடத்தில் விண்ணப் பிக்க ஏதுவாக “மக்களுடன் முதல் வர்” திட்டம் உருவாக்கப்பட்டுள் ளது. மேலும், இம்முகாம்கள் நடை பெறும் இடங்களில் பொதுமக்க ளுக்கு சேவை வழங்கும் 13 துறை களின் சார்பில் மனுக்களை பெற துறைவாரியாக தனித்தனி மேசை முகப்புகள் பொதுமக்களின் மனுக் களைப் பெறுவதற்கான அதற்குரிய அலுவலர்களுடன் அமைக்கப்பட் டுள்ளது. சேலம் மாவட்டத்தில் திங் களன்று முதல் ஜன.6 ஆம் தேதி யன்று 16 நாட்களில் 142 முகாம் களை நடத்த உரிய இடங்கள் தேர்வு  செய்யப்பட்டு, மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளன.

இம்முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட் களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்  அளிக்கும் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்ய முகாம் கண் காணிப்பு அலுவலர்கள் மற்றும் முகாம் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, “மக்களு டன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக, மாற் றுத்திறனாளிகள் நலத்துறையில் 5 நபர்களுக்கு விலையில்லா மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கரு விகள், மடக்கு நாற்காலியும், பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறையில் 5 நபர்க ளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. மேலும், தொழிலாளர் திறன் மேம் பாட்டுத் துறையில் இயற்கை மரண நிவாரணத் தொகை ஒரு நபருக் கும், கூட்டுறவுத் துறையில் தொழில் முனைவோர் கடனுதவி மற்றும் சிறு தொழில் கடனுதவி 5 நபர்களுக்கும், வருவாய்த்துறையில் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடியி ருப்புச் சான்றிதழ்கள் 5 நபர்களுக் கும், மின்சாரத் துறையில் மின் இணைப்புப் பெயர் மாற்றம் 4 நபர் களுக்கும், நகராட்சி நிர்வாகம் மற் றும் குடிநீர் வழங்கல் துறையில் சொத்து வரி பெயர் மாற்றம் 7 நபர்க ளுக்கும் என மொத்தம் 32 நபர்களின் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு சான்றிதழ்கள் மற்றும்  நலத்திட்ட உதவிகளை வழங்கப் பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட் சியர் செ.கார்மேகம், மாநகராட்சி  மேயர் ஆ.ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ரா.ராஜேந்திரன், ரா.அருள், எஸ்.சதாசிவம், மாநக ராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை,  மாவட்ட வருவாய் அலுவலர் பெ. மேனகா, முன்னாள் அமைச்சர் டி. எம்.செல்வகணபதி, மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி உட் பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று ஈரோடு மாவட் டம், சென்னிமலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற் றது. இம்முகாமில் மனுக்கள் வழங் கியவர்களுக்கு உடனடி தீர்வு  ஆணைகளை மாவட்ட ஆட்சியர்  ராஜகோபால் சுன்கரா முன்னிலை யில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன் வழங்கினார். ஈரோடு மாநக ராட்சி, மாணிக்கம்பாளையத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடை பெற்றது.