கோவை, நவ.25- விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர் களில் ஒருவரான, தகைசால் தமிழர், தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு விழா மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் சனியன்று நடைபெற்றது. முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா நவம் பர் 15 ஆம்தேதி காலமானார். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றும், உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டத்திலும் என 8 ஆண்டுகள் சிறையிலும், நான்கு ஆண் டுகள் தலைமறைவு வாழ்க்கையும் என தியாக வாழ்க்கை வாழ்ந்தவர் தோழர் என்.சங் கரய்யா. பொதுவுடமை இயக்கத்தவருக்கு உந்து சக்தியாக திகழ்ந்த தோழர் என்.சங்க ரய்யாவின் மறைவையைடுத்து, தமிழக மெங்கும் சங்கரய்யாவின் படத்திறப்பு மற் றும் புகழாஞ்சலி கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் என்.சங்கரய்யா படத்திறப்பு விழா சனியன்று நடைபெற்றது. கோவை காந்திபுரம் மலை யாள சமாஜத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமை ஏற் றார். என்.சங்கரய்யா உருவப்படத்தை மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற புகழஞ் சலி கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், திமுக கோவை மாநகர மாவட்ட செயலா ளர் நா.கார்த்திக், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் மயூரா.எஸ்.ஜெயக் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லப் பொருளாளர் எஸ்.ஆறுமுகம், தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், எச்எம்எஸ் மாநில துணைத் தலைவர் டி.எஸ்.இராஜமணி, விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலா ளர் குமணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு நிகழ் வில் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில், சிபிஎம் கிழக்கு நகரக்குழு செயலாளர் என். செல்வராஜ் நன்றி கூறினார்.