districts

img

கோவை அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து பச்சிளம் குழந்தை உட்பட இருவர் பலி

கோவை, ஏப்.12- கோவை அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பச்சிளம் குழந்தை மற்றும் ஆம்பு லன்ஸ் ஒட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.  உடுமலைப்பேட்டை பகுதி யைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (26). இவரது மனைவி ரம்யாவிற்கு செவ் வாயன்று காலை திருப்பூர் மாவட் டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தைக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து பச்சிளம் குழந்தை, குழந்தையின் தந்தை சிவ சங்கர், உறவினர்களான பழனிச் சாமி, சகுந்தலா, வள்ளி மற்றும் தனி யார் மருத்துவமனை செவிலியர் ஆகியோர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி வழியாக கோவை நோக்கி சென்று கொண்டி ருந்தனர். ஆம்புலன்சை ரவீந்திரன் என்பவர் ஓட்டியுள்ளார்.  இந்நிலையில், கோவை மலு மிச்சம்பட்டி அருகே வந்தபோது திடீ ரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்பு லன்ஸ், சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத் தில் பச்சிளம் குழந்தை மற்றும் ஆம் புலன்ஸ் ஓட்டுநர் ரவீந்திரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாய மடைந்த பழனிச்சாமி, வள்ளி ஆகிய இருவரும் அருகே உள்ள தனியார்  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தலை யில் காயமடைந்த சகுந்தலா கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை காவல் துறையினர் உடல் களை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொக்லைன்  மூலம் சாலையில் கிடந்த ஆம்புலன்சை  அப்புறப்படுத்தினர். மேலும், சம்பவம் தொடத்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.