திருப்பூர் ஜூலை 10 – திருப்பூரில் மின்சாரம் தாக்கி புதனன்று இரு மயில்கள் உயிரிழந்தது. திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் இறைத்தேடி வந்த மயில் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் அமர்ந்தது. அப் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத் திலேயே உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம் பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த இரண்டு வயது ஆன மயிலை எடுத்துச் சென்றனர். அதேபோல் கேவி ஆர் நகர் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் பெண் மயில் ஒன்று உயிரிழந்தது.