கோவை, ஜன.11- கோவை வெள்ளலூர் பகுதியில் பெரியார் சிலை அவ மரியாதை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி அமைப் பைச் சேர்ந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை வெள்ளலூர் பகுதியில் திராவிடர் கழகத்தினர் நடத்தி வரும் பகுத்தறிவு படிப்பகம் முன்பாக பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜன.9 ஆம் தேதியன்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக, பெரி யார் சிலைக்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அடை யாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வந்த னர். இந்நிலையில், காவல் துறையினர் நடத்திய விசார ணையில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அருண் கார்த்திக் என்பவர் பெரியார் சிலையை அவமரியாதை செய்ததும், அதற்கு அவரது நண்பர் மோகன்ராஜ் உதவி யதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், கோவை யில் நடந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சிகளுக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் கண்டனம் தெரி வித்து போராட்டங்களில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுபோதையில் பெரியார் சிலையை அவமரி யாதை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதனை யடுத்து அருண்கார்த்திக், மோகன் ராஜ் ஆகிய இருவரை யும் போத்தனூர் காவல் துறையினர் கைது செய்தனர்.