குடிநீரில் மனித கழிவு கலக்கிய இருவர் கைது
உதகை, ஏப்.1- உதகை அருகே, குடிநீரில் மனித கழிவு கலக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற் படுத்திய நிலையில், மனித கழிவை கலந்த இருவர் கைது செய்யப்பட் டனர். புதுக்கோட்டை மாவட்டம், வேங் கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டி யில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நீலகிரியில் குடி நீரில் மனித கழிவுகளை கலந்த சம் பவம் பொதுமக்களை அதிர்ச்சிய டையச்செய்து உள்ளது. இச்சம்பவம் குறித்த தகவலறிந்தவுடன் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு இரு வரை கைது செய்தனர். இதுகுறித்து வருமாறு, தஞ்சாவூர் மாவட்டம் அக்ரஹாரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ரஞ்சித் (29), சக்திவேல் (24). இவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த எல்ல நல்லிக்கு வந்து குடும்பத்துடன் தங்கி, செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் தனியார் நிறுவனத்தில், பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி குந்தா பிக்கட்டியில் உள்ள ஒரு வீட்டில் செப்டிக் டேங்கில் இருந்து கழிவுகளை அகற்றி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். வழக்கமாக அதிகரட்டி யில் உள்ள ஒரு தனியார் உர மையத் திற்கு அந்த கழிவுகளை கொடுப்பார் கள்.
அதற்கு கட்டணமாக ரூ.1000 கொடுக்க வேண்டும் என்று கூறப்படு கிறது. எனவே, பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், நரிக்குழிஆடா என்ற இடத்தில் மனித கழிவுகளை கொட்டி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந் தாலும், அந்த இடம் பள்ளமாக இருந்த தாலும் மனித கழிவுகள் நரிக்குழி யாடா கிராம ஊற்று தண்ணீரில் கலந்து விட்டது. மனிதக் கழிவு கலந்த இந்த தண்ணீரை குடித்ததால் ஏராளமான னோருக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதுகுறித்து, நஞ்சநாடு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா ஊட்டி ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித் தார். இதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். இதில், குடிதண்ணீர் ஊற்று அருகில் மனித கழிவுகளை ரஞ்சித் மற்றும் சக்திவேல் கொட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்திய தண்ட னைச் சட்டம் 269 ( உயிருக்கு ஆபத் தான நோய் தொற்றை பரப்புதல்), 277 (பொது நீர்தேக்கத்தை மாசுபடுத் துதல்), 328 (காயம் ஏற்படுத்தும் நோக்கில் மயக்க மருந்து கலக்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் மற்றும் சக்திவேலை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, இருவரை யும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறை யில் அடைத்தனர்.
குளிர்சாதன பெட்டிகள் வாங்கியதில் ஊழல் ஏரியூர் பொதுமக்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு
தருமபுரி, ஏப்.1- ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவல கத்திற்கு குளிர்சாதன பெட்டிகள் வாங்கி யதில் ஊழல் நடைபெற்றதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளது. இது அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சியில் ஒன்றியத்திலிருந்து ஏரியூர், நெருப்பூர், பெரும்பாலை, நாகமரை, ஒட்டனூர், சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை பிரிக்கப்பட்டு ஏரியூர் ஊராட்சி ஒன்றியமானது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் புதியதாக உருவாக்கப்பட்டது. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு தலைவராக பழனிசாமி என்பவரும், துணைத்தலைவராக தன பால் என்பவரும் இருந்து வருகின்றனர். தற்போது தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வரும் ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் புதியதாக பொதுப் பணித்துறை சார்பில் சுமார் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா விற்காக எதிர் நோக்கி உள்ளது. இந்நிலையில், அலுவலக கூட்ட ரங்கு மற்றும் அலுவலக பயன்பாட் டிற்கு பொருத்தியுள்ள குளிர்சாதன பெட்டிகள் வாங்கியதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளது. இதில் 1.5 டன் 9 குளிர்சாதன பெட்டிகளும், 2 டன் குளிர்சாதன பெட்டிகள் 2 என மொத்தம் 11 குளிர்சாதன பெட்டிகள் வாங்கியதற்காக தூத்துக்குடியில் உள்ள சத்யா ஏஜென்சியிடம் கடந் தாண்டு டிச.11 ஆம் தேதியன்று ரூ.6 லட்சத்து 77 ஆயிரத்து 200 மதிப்புள்ள பொருட்கள் வாங்கியதற்கான பில் வாங்கியுள்ளார்கள். ஆனால், கடந் தாண்டு டிச.27 ஆம் தேதியன்று ஏரியூர் ஒன்றிய துணைத்தலைவர் தனபாலின் மனைவி உத்தரம்மாள் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு அதே தூத்துக்குடி சத்யா ஏஜென்சியிடமிருந்து ரூ.6 லட்சத்து 29 ஆயிரத்து 796 பிடித்தம் போக அப்படியே திருப்பி அனுப்பப் பட்டுள்ளது. மேலும், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வாங்கபட்ட குளிர் சாதன பெட்டிகளில் இவ்வளவு பெரிய மோசடிக்கு காரணமான ஏரியூர் ஒன்றி யக்குழு தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் தனபால் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் துறை சம்பந்தப்பட்ட ஊழியர்களும் இதற்கு உடந்தையாக செயல்பட் டுள்ளனர். எனவே, உடனடியாக விரைந்து இந்த ஊழலை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீரில் மூழ்கி பெண் மான் பலி
அவிநாசி, மார்ச் ஏப்.1- சேவூரில் நாய்கள் துரத்தி கடித்ததில், காயமடைந்த 3 வயது பெண் மான் குட்டையில் மூழ்கி உயிரிழந்தது. சேவூர் - ஏரிமேடு தர்மக்கர்த்தா தோட்டம் அருகே 3 வயது பெண் மானை நாய்கள் துரத்தி வந்தது. படுகாயம் அடைந்த மான் தோட்டத்து பண்ணை குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது. இதைப் பார்த்த தோட்டத்து பணியாளர்கள், தோட்டத்து உரிமையாளர் தேவராஜ்(எ)திருஞானசம்பந்தம் ஆகியோர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதை யடுத்து சம்பவயிடத்திற்கு வந்த வனத்துறை வனகாப்பாளர் கணபதி செல்வம், மான் காவலர் வெங்கடேஷ் ஆகியோர் உயிரிழந்தநிலையில் இருந்த மானை எடுத்து பார்த்ததில், மானின் கழுத்துப் பகுதியில் நாய்கள் கடித்து காயமடைந்தி ருந்தது தெரியவந்தது. இரவு நேரமானதால், தோட்டத்தி லேயே மான் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டது. சனி யன்று காலை கால் நடை மருத்துவர் மூலம் பிரேதப் பரிசோ தனை செய்து அடக்கம் செய்யப்பட்டது.
லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை
திருப்பூர், ஏப். 1 - வழக்கு தொடுத்தவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது. ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (65). இவர் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு பணியில் இருந்த போது, கோவையை சேர்ந்த ராஜகோ பாலன் என்பவர் தனது மகளுக்காக கொடுத்த வரதட்சணை வழக்கில் மருமகனுக்கு தண்டனை பெற்று தருவதாகக் கூறி, ராஜகோபாலனிடம் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் பெற்றார். அப் போது நாகராஜனை அங்கிருந்த கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு, கோவையில் இருந்து திருப்பூருக்கு மாற்றப்பட்டு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி புக ழேந்தி வெள்ளியன்று தீர்ப்பளித்தார். அதில், லஞ்ச ஒழிப்பு தடுப்பு சட்டம் 7-இன் படி ஓராண்டு சிறை, ரூ. 5 ஆயிரம் அபரா தமும், 13-ன்படி 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை அவர் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அரசு உதவி வழக்கறிஞர் செந்தில்குமார் இவ் வழக்கில் ஆஜாரானார்.
காவல் துறையினருக்கு யோகா பயிற்சி
திருப்பூர், ஏப். 1 - திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் காவலர் களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. ஏராளமான காவ லர்கள் இந்த பயிற்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட னர். காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்னல்களை சந் தித்து வருகின்றனர். இந்நிலையில் காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி அல்லது மன வலிமையை ஊக்குப்படுத்தும் வித மாக யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு காவல் இயக்குனர் சங்கர் வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றக்கூடிய காவலர்களுக்கு மனவலிமையை ஊக் கப்படுத்தும் நோக்கத்துடன் மாநகர காவல் ஆணையர் பிர வீன் குமார் அபினபு உத்தரவின் பேரில், கொங்கு நகர் பகுதி காவல் உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் ரயில் நிலையம் அருகில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நி லைப் பள்ளியில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டது. இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் யோகா பயிற்சியும், மூச்சுப் பயிற்சிகளும் அளிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் வடக்கு காவல் நிலையம்,15 வேலம் பாளையம் காவல் நிலையம் மற்றும் வடக்கு மகளிர் காவல் நிலைய காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
கொப்பரை தேங்காய் கொள்முதல்
அவிநாசி, ஏப்.1- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சனிகிழமை முதல் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படுள்ளது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நடப்பு நிதி ஆண்டில்,1000 மெட்ரிக் டன் தேங்காய் கொப்பரை கொள்மு தல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசின் ஆதார கொள்முதல் திட்டதின் கீழ் அரவை கொப்பரை ஒரு கிலோ ரூ.108.60 பைசா, பந்து கொப்பரை ஒரு கிலோ ரூ.117.50 பைசா என்ற அடிப்படையிலும் கொள்முதல் செய்யப்படவுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள சேவூர், அவிநாசி, குன்னத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங் கல், ஆதார் நகல், வங்கி பாஸ் புக் நகல், புகைப்படம் 1 ஆகி யவற்றை சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்து கொப்பரையை விற்று பயன் பெறலாம். எனக் குறிப் பட்டுள்ளது.
ரூ. 22லட்சத்து சூரியகாந்தி விதை ஏலம்
திருப்பூர், ஏப்.1- வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடை பெற்றது. இதில், 43 விவசாயிகள் கலந்து கொண்டு 46 ஆயி ரத்து 471கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஒரு கிலோ சூரியகாந்திவிதை அதிக பட்சமாக ரூ.51.39 க்கும், குறைந்தபட்சம் ரூ.44.59 க்கும் கொள் முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ. 22லட்சத்து 6 ஆயிரத்து 843க்கு வணிகம் நடைபெற்றது.
பனியன் நூல் விலையில் மாற்றம் இல்லை
திருப்பூர், ஏப்.1 - மாதாந்திர அடிப்படையில் பனி யன் நூல் விலை அறிவிக்கப்படும் நிலையில், கடந்த பிப்ரவரி முதல் தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஏப் ரலிலும் நூல் விலை மாற்றம் இல்லா மல் தொடர்கிறது. 2023ஆம் ஆண்டில் நூல் விலை ஜனவரி மாதம் 20 ரூபாய் குறைந்த நிலையில், பிப்ரவரி மார்ச் மாதங்க ளைப் போலவே ஏப்ரல் மாதத்திலும் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நூற்பாலைகள் அறிவித் துள்ளன. திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங் கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வரு கின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில் துறையினர் தங்களுக்கு ஆர் டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள் முதல் செய்து ஆடைகளை தயாரிப் பார்கள். நூல் விலை உள்பட மூலப் பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ண யம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நூல் விலை மிக அதிக அளவில் உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத் தில் நூல் விலையில் எந்தவித மாற்ற மும் இன்றி ஜனவரி மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் அறி வித்திருந்தன. இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலைகளும், எந்தவிதமான மாற்றமும் இல்லா மல் தொடர்ந்தது. ஏப்ரல் மாதத்திற் கான நூல் விலை சனிக்கிழமை அறி விக்கப்பட்டது. அதிலும் கடந்த மாதத்தை போலவே மாற்றம் இல்லா மல் அதே நிலை தொடரும் என நூற் பாலைகள் தெரிவித்துள்ளனர். நூல் விலை குறையவில்லை என்றாலும், கடந்த மூன்று மாதங்களாக அதிக ரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ 20-ஆவது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ஆம் நம்பர் ரூ.265-க்கும், 30-ஆம் நம்பர் ரூ.275-க்கும், 34-ஆம் நம்பர் ரூ. 295-க்கும், 40-ஆம் நம்பர் ரூ.315-க்கும், 20-ஆம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ஆம் நம் பர் ரூ. 255-க்கும், 30-ஆம் நம்பர் ரூ.265 -க்கும், 34-ஆம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ஆம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:49.85/60அடி நீர்வரத்து:703கன அடி வெளியேற்றம்:1124கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:52.43/90அடி.நீர்வரத்து:39கனஅடி வெளியேற்றம்:21கன அடி
ஆழ்துளை கிணறு அமைக்க மீண்டும் அனுமதியா?...
உதகை, ஏப்.1- நீலகிரி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்கி வரு கிறது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டமாக இந்திய புவியியல் ஆய்வு அமைப்பால் (ஜிஎஸ்ஐ) வகைப்படுத் தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நில நடுக்கம் ஏற்படக் கூடிய பகுதியாகவும் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வின் படி இம்மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பேரிடர் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு ஜேசிபி, பொக் லைன் போன்ற கனரக வாகனங்களை கொண்டு மலையை குடைவது, பாதை அமைப்பது, பாறைகள் வெடி வைத்து உடைப்பதற்கும் தடை உள்ளது. மேலும், சரிவான பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன. இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு வரை ஆழ்துளை கிணறு அமைக்க எவ்வித தடையும் விதிக்கப் படவில்லை. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ரிக் லாரிகள் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாகவும் நிலச் சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நில வியது. இதையடுத்து, ஆழ்துளைக் கிணறு அமைப்பது முற்றிலுமாக தடை செய்து என அப்போதிருந்த ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதன்காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது முற்றிலுமாக தடுக்கப்பட்டது. இந்நிலையில், ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திபேட்டை அருகே கொல்லிமலை கிராமத்திற்கு செல்லும் சாலையை ஒட்டி தனியார் இடத்தில் தடையை மீறி ரிக் லாரி மூலம் ஆழ் துளை கிணறு அமைக்கும் பணி வியாழ னன்று அதிகாலை முதலே நடை பெற்று வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுச்சூழலை பாது காக்கும் நோக்கில் ஆழ்துளை கிணறு அமைக்க நீலகிரி மாவட்டத்தில் தடை உள்ள நிலையில், வசதி படைத்தோ ருக்காக தடை உத்தரவு மீறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.