ஏற்காட்டில் கனமழை, கடுங்குளிரால் மக்கள் அவதி
சேலம், நவ.15- ஏற்காட்டில் பெய்து வரும் கனமழை மற்றும் கடுங்குளிரால் அப்பகுதி பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். வடகிழக்கு பருவமழை தீவிரம டைந்துள்ளதால், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத் திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாநக ரில் வியாழனன்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சேலம் 4 ரோடு, 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை, அஸ்தம் பட்டி, நெத்திமேடு, அம்மாப்பேட்டை உட்பட பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ் வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல ஏற்காட்டில் வியாழனன்று மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை கன மழை கொட்டியது. தொடர்ந்து இர விலும் சாரல் மழையாக நீடித்தது. மேலும் பனி மூட்டமும் நிலவி வருகி றது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் கடும் குளிரால் அவ திப்பட்டு வருகின்றனர். ஸ்வெட்டர் மற் றும் மழை கோட் அணிந்தபடி பொது மக்கள் சாலைகளில் நடமாடி வருகின்ற னர். கடும் குளிரால் அங்கு வசிக்கும் தொழிலாளர்களும் கடும் அவதிப்படுவ தால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள் ளது. இதேபோல ஓமலூர், சங்ககிரி, டேனீஷ்பேட்டை உட்பட பல பகுதி களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இத னால் அங்குள்ள வயல்வெளிகளில் தண் ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்தொடர்ச்சியாக வெள்ளியன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை மேகக்கூட்டம் சூழ்ந்திருந்தது.
அரசு ஊழியர் சங்க வட்ட மாநாடு
தருமபுரி, நவ.15- அரசு ஊழியர் சங்கத்தின் பென்னாகரம் வட்ட மாநாட் டில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பென்னாகரம் வட்ட 15 ஆவது மாநாடு, வெள்ளியன்று பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. வட்டத் தலை வர் திம்மராயன் தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் சுருளிநாதன் துவக்கவுரை யாற்றினார். வட்டச் செயலா ளர் கி.வேலவன், பொருளா ளர் ஜே.சபரீஸ் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்த னர். மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். முருகன் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். இதைத்தொடர்ந்து சங் கத்தின் பென்னாகரம் வட் டத் தலைவராக எம்.திம்மரா யன், செயலாளராக வெற்றி செல்வன், பொருளாளராக டி.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூரில் வேலை கேட்டு வந்த பெண்ணை காரில் கடத்திய இருவர் கைது
திருப்பூர், நவ.15 - திருப்பூரில் வேலை கேட்டு ஆன்லைனில் பதிவு செய்தி ருந்த பெண்ணை காரில் கடத்திய இருவரை காவல் துறையி னர் கைது செய்தனர். திருப்பூர் மண்ணரை பகுதியைச் சேர்ந்தவர் கமலி (28). ஆன்லைனில் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தார். கடந்த 7ஆம் தேதி செரீப் காலனி அகரம் அறக்கட்டளை அருகே நேர்காணலுக்கு வருமாறு ஆன்லைனில் அனுப்பி இருந்த னர். இதை அடுத்து கமலி அந்த இடத்திற்கு சென்றார். அங்கு ஒரு காரில் வந்த இருவர், அலுவலகத்தை பார்க்கச் செல்ல லாம் என்று சொல்லி காரில் ஏறும்படி அழைத்தனர். கமலி மறுக்கவே, அலுவலகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் இதே இடத்தில் உங்களை இறக்கி விடுகிறோம் என்று கூறியுள்ள னர். இதைக் கேட்டு கமலி காரில் ஏறி பயணித்தார். கார் தாராபு ரம் சாலையில் வெகு தூரம் செல்வதை கண்டு சந்தேகம டைந்த கமலி தன்னை இறக்கி விடும்படி சத்தம் போட்டு இருக்கிறார். அப்போது உடன் பயணித்த ஒருவர் கமலியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இருக்கிறார். கமலி துணிச் சலுடன் அந்த நபரை தட்டி விட்டு, ஓடும் காரில் இருந்து கீழே குதித்துள்ளார். தாராபுரம் சாலை ஏஞ்சல் கல்லூரி அருகே இச் சம்பவம் நடைபெற்றது. காரில் இருந்து குதித்த கமலி காயம டைந்தார். அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அவரை திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கமலி அளித்த புகாரின் அடிப்ப டையில், திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கடத்தல், கொள்ளை, கூட்டுக் கொள்ளை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளி களை கண்டுபிடித்து அவர்கள் பயன்படுத்திய காரை பறிமு தல் செய்தனர். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சாரதி (38), மணிகண்டன் (34) ஆகிய இருவரையும் கைது செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
வரி உயர்வை ைவிடக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்
திருப்பூர், நவ.15- திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களை பாதிக் கும் சொத்து வரி உயர்வை கைவிடக் கோரி வெள்ளியன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வெள்ளியன்று மாநகராட்சி அலுவலகம் எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நிர்வாகிகள் எஸ். ரவிச்சந்திரன், பி.ஆர்.நடராஜன், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.
கொள்ளையடிக்க திட்டமிட்டதாக விடுதியில் தங்கி இருந்த மூவர் கைது
திருப்பூர், நவ.15 - திருப்பூரில் பூட்டி இருக்கும் வீடுகளில் இரவு நேரம் கதவை உடைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டதாக கூறி தனியார் விடுதியில் வந்து தங்கி இருந்த, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மூவரை கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சபரிவேலன் (19) உட்பட மூவர் பட்டா கத்தியுடன் தங்கி இருந்ததாகவும், இவர்கள் மீது பல குற்ற வழக்குகள் உள்ளதாவும் காவலர்கள் தெரிவித்தனர்.
ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
நாமக்கல், நவ.15- 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி, வேட்டாம்பாடி பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் உள்ள வேட்டாம் பாடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாழனன்று 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த இரு மாதங்க ளாக வேட்டாம்பாடி, செல்லப்பாகாலனி, தாதம்பட்டி பகுதி யில் உள்ள சிலருக்கு மட்டுமே நூறு நாள் வேலை வழங்கப் படுகிறது. பலருக்கு வேலை வழங்குவதில் ஊராட்சி நிர்வா கம் பாரபட்சம் காட்டுகிறது. வேலை வழங்கப்படாததால் போதிய வருவாயின்றி தவித்து வருவதாக, ஊராட்சி மன்ற செயலாளர் சக்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து ஓரிரு நாட்களில் அனைவருக்கும் வேலை வழங்கு வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என ஊராட்சி மன்ற செயலாளர் உறுதியளித்தார். அதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோவை வழியாக சிறப்பு ரயில் இயக்கம்
சேலம், நவ.15- சபரிமலை சீசனை முன்னிட்டு, கச்சிகுடாவிலிருந்து கோவை வழியாக கோட்டயத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப் பட உள்ளது. இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சபரிமலை சீசனை முன் னிட்டு, நவ.21, 28 ஆகிய வியாழக்கிழமைகளில் தெலுங்கானா மாநிலம், கச்சிகுடாவிலிருந்து மாலை 3.40 மணிக்குப் புறப் படும் கச்சிகுடா – கோட்டயம் சிறப்பு ரயில் (எண்: 07133), மறு நாள் மாலை 6.50 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் நவ.22, 29 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் கோட்டயத்திலிருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்படும் கோட்ட யம் - கச்சிகுடா சிறப்பு ரயில் (எண்: 07134), மறுநாள் இரவு 11.40 மணிக்கு கச்சிகுடா ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயிலானது எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, கடப்பா, தாடிபத்ரி, கூட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும், என தெரி விக்கப்பட்டுள்ளது.
விளைநிலங்கள் வழியே எண்ணைய் குழாய் பதிப்பு
விவசாயிகள் கடும் எதிர்ப்பு கோவை, நவ.15- விளைநிலங்கள் வழியாக பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித் துள்ளனர். கோவை மாவட்டம், இருகூரிலிருந்து பெங்களூரு வரை 270 கிலோ மீட்டர் தொலை வுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்டது. தற்போது அந்த குழாய் அருகிலேயே மற்றொரு குழாயினை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்காக ஐடி பிஎல் நிறுவனம் பதிக்கும் பணிகளை செய்து வருகின்றது. புதிதாக குழாய்கள் பதிக்கப் படுவதற்கு சூலூர் வட்டார விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூலூர், ராவத் தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு, பகலாக காவல் துறை துணையுடன் எண் ணெய் குழாய் பதிக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றது. விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில், சாலை ஓரத் தில் குழாயினை கொண்டு செல்வதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வியாழனன்று எந்த முன் அறிவிப்பும் இன்றி, இரவோடு இரவாக வந்து குழாய் பதிப்ப தற்காக நிலத்தை சேதப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து விவசாயிகள் சங் கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற் றுகையிட்டனர். இதனையடுத்து பேச்சு வார்த்தை நடத்திய வருவாய்த்துறை அதி காரிகள், போராட்டக்காரர்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்க அழைத்துச் சென் றனர். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசா யிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சம்பவ இடத்தில் ஏரா ளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.