உடுமலை, டிச.8- நகராட்சிக்கு சொந்தமான இடத் தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்ற கட்டிடத்தை பேரிடர் மோளாண்மை சட்டத்தின் படி கொரோனா சிறப்பு சிகிச்சை மைய மாக மாற்ற வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. உடுமலை அரசு மருத்துவம னைக்கு எதிரே நகராட்சிக்கு சொந்த மான 97 சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தை பல வருடகாலமாக சில உள்ளூர் வசதி படைத்த நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, அதில் மனம கிழ் மன்றம் என்ற பெயரிலும், காலி இடத்தில் வணிக நோக்கில் கடை களையும் கட்டி வாடகை வசூல் செய்து வருகின்றனர். இது நகராட்சி சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ளது என நகராட்சி ஆணையர் சரவணக்குமார் கடந்த 11.04.2017 ஆம் தேதி விதி முறைகள் மீறிய கட்டிடங்கள் என மூன்று அறைக ளுக்கு சீல் வைத்தார். பின்னர் வியா பார நோக்கில் கட்டப்பட்ட கடைக ளுக்கும், முன் பகுதி கேட்டிற்கும் சீல் வைத்து, மனமகிழ் மன்றம் உள்ள அனைத்து பகுதிகளும் உடுமலை நகராட்சிக்கு சொந்தம் எனவும், விரைவில் இடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்ப டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வரை இக்கட் டிடம் மற்றும் காலி இடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வில்லை. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதி கரித்து வரும் நிலையில் அரசு மருத் துவமனைக்கு எதிரே இருக்கும் மன மகிழ் மன்ற கட்டிடத்தை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் தண்டபாணி கூறுகையில், உடு மலை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் அமைப்புகள் செயல்பட்டு வருவதை அப்புறப்ப டுத்தி அந்த இடம் முழுவதையும் உடுமலை அரசு மருத்துவமனை பயன்படுத்தும் வகையில் விரிவாக் கம் செய்ய வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் விளைவாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் போரிடர் மேளாண்மை சட்டத்தின் படி மனம கிழ் மன்ற கட்டிடம் மற்றும் காலி இடத்தை கொரோனா பரிசோதனை மையம் அமைப்பதற்கும், மருத்துவ மனை ஊழியர்கள் ஓய்வுக்கும், அரசு வாகனங்களை நிறுத்தவும் என முழுக்க முழுக்க அரசு மருத்துவ மனை பயன்பாட்டிற்கு வருவாய் துறை நிர்வாகம் கொண்டுவந்தது. இவ்வாறு மருத்துவ பயன்பாட்டிற் காக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த இடம் எந்த காரணமும் இன்றி சில மாதங்களில் மீண்டும் மனமகிழ் மன்றமாக செயல்பட தொடங்கிவிட் டது. அரசு இந்த இடத்தில் நிரந்தர மாக கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நட வக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு தாமதம் செய்யாமல் அரசு மருத்துவனையின் விரிவாக்க பணிகளுக்கு இந்த இடத்தை பயன் படுத்த வேண்டும் என்பதே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை என்றார்.