அவிநாசி,ஜன.5 காலாவதியான சுங்கச் சாவடிகளை ஒன்றிய அரசு உடனடியாக அகற்ற வேண் டும் என லாரி உரிமையாளர் மற்றும் முகவர்கள் சங்கத்தி னர் கோரிக்கை வைத்துள்ள னர். அவிநாசியில் - ஈரோடு சாலையில் பாரத் லாரி உரி மையாளர் மற்றும் முகவர்கள் சங்கம் 2 ஆவது மாநில மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. இதில், சாலை வரியை குறைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை ஒன்றிய அரசு அகற்ற வேண்டும். வாகன உரிமையா ளரிடம் ஏற்றுக் கூலி இறக்கு கூலி கேட்கக் கூடாது. பொருட்களை விற்பவரிடம் மட்டுமே கேட்க வேண்டும். ஆன்லைன் அபராதம் விதிக்கும் பொழுது, வாகன உரிமையாளர் அல்லது ஓட்டுநர் ஒப்புதல் இன்றி, தன்னிச்சை யாக அபராதம் விதிக்கும் முறையை நிறுத்த வேண்டும். வாகன ஓட்டுனர்கள் செய்யும் விதி மீறலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக னத்தின் மீது வழக்கு பதிவு செய்ய கூடாது. காப்பீட்டுத் தொகையை குறைக்க வேண்டும். ஆர்டிஓ அலுவலகங்களில் மின் ஒளி பிரதி பலிப்பு ஸ்டிக்கர் முறையை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநிலத் தலைவர் வேல்முருகன், மாநிலச் செயலாளர் சுரேஷ், மாநில பொரு ளாளர் ரமேஷ், அப்துல் காதர், அண்ணா துரை, இம்மாநாட்டு சிறப்பு விருந்தினராக சண்முகா அப்பா, தன்ராஜ், யுவராஜ், ஜெயக் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.