districts

img

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

ஈரோடு, பிப்.6- திம்பம் மலைப்பாதையில் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு லாரி கவிழ்ந்தது.இந்த விபத்தில் ஓட்டுநர், உதவியாளர் அதிர்ஷ்டவ சமாக உயிர் தப்பினார்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லம் அருகே திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும், இங்கி ருந்து கர்நாடகாவுக்கும் செல்லும் முக்கிய பாதையாக இருப்பதால், திம்பம் மலைப்பாதையில் எப்போ தும் கார், பேருந்து, வேன் உள்ளிட்ட  வாகனங்கள் சென்று வந்தபடி  இருக்கும். திம்பம் மலைப்பாதை யில் 27 கொண்டை ஊசி வளைவு கள் உள்ளன. இதில் சாதாரணமாக வரும் லாரிகள் கொண்டை ஊசி  வளைவுகளை கடந்து விடுகின்றன. ஆனால், அதிக பாரம் ஏற்றி வரும்  லாரிகள் கொண்டை ஊசி வளைவு களை கடக்க முடியாமல் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இந் நிலையில், கர்நாடகா மாநிலம் சாம் ராஜ்நகரில் இருந்து சேலம் மாவட் டம், சங்ககிரிக்கு கிரானைட் பாரம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி சனி யன்று அதிகாலை 5 மணியளவில் திம்பம் மலைப்பாதையின் 19-வது கொண்டை ஊசி வளைவை கடந் தது.  அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் பாய்ந்தது. ஆனால், பள்ளத்தில் இருந்த ஒரு மரத்தில், லாரி மோதியதால் மேற்கொண்டு உருண்டு விழாமல் லாரி அந்தரத் தில் தொங்கியது. இதையடுத்து உடனே ஓட்டுநரும், கிளீனரும் கீழே குதித்து உயிர் தப்பினார்கள். ஆனா லும் அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. அந்த வழியாக வாக னங்களில் சென்றவர்கள் பள்ளத் தில் இருந்து டிரைவரையும், கிளீன ரையும் மீட்டு சாம்ராஜ் நகர் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், மரத்தில் மோதாமல் இருந்திருந்ததால் லாரி சுமார் 500 அடி பள்ளத்தில் பாய்ந்து உருண்டி ருக்கும். உயிர்ச்சேதமும் ஏற்பட்டு  இருக்கும். மேலும்,சாலை ஓரத்தில் சம்பவம் நடந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட வில்லை. இந்த விபத்து குறித்து ஆச னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.