கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி யின் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறி முகக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந் தியா கூட்டணி திமுக சார்பில் கோவை நாடாளுமன்றத்தில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாரை, தமிழக தொழில்துறை அமைச் சர் டி.ஆர்.பி ராஜா, புறநகர் கட்சி நிர்வாகிக ளுக்கு அறிமுகம் செய்துவைத்தார். பின் னர், திமுக சின்னத்தில் போட்டியிடும் கண பதி ராஜ்குமாரை பெருவாரியான வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென வாக்குகள் சேகரித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்க ளிடம் பேசிய டி.ஆர்.பி.ராஜா, திமுக கோவையில் அட்டகாசமான வெற்றியை பெரும். திமுகவுக்கு எதிராக போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். அண்ணாமலையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிஆர்பி ராஜா, இப்போதே சிலர் சூடு..சூடு என்கின்றனர். இன்னும் அடுப்பே பத்தவைக்கவில்லை, அதற்குள்ள சூடு ஏறிவிட்டதா என கிண்டல டித்தார். மேலும், பிரதான எதிர்க்கட்சி அதி முக. அதுகுறித்த கேள்விகளை மட்டும் கேட் கவும், பொதுமக்களை சந்தித்து சென்று கொண்டிருக்கும் எங்களிடம், மற்றவர்கள் பற்றி கேள்வி கேட்டால் அது எங்களுக்கு கவனச் சிதறல் மட்டுமே. எனவே, பாஜக போன்ற சில்லறை கட்சிகளை ஓரங்கட்டி விட்டு களத்தில் உண்மையான எதிரியிடம் போட்டியிட்டு, கோவையில் மகத்தான வெற்றி பெறுவோம் என்றார். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், வெயில் அடித்தால், மழை அடித்தால், இட்லி சாப் பிட்டால், சாம்பார் ஊத்தினால் அனைத்துக் கும் திராவிடக்கட்சி காரணம் என்று ஒரு வர் உளருவாரே ஆனால், அவர் ஏதோ புத்தி சுவாதினம் இல்லாதவர் என்றே பொருள்படும். பத்தாண்டு காலம் தமிழ கத்திற்கு எதையும் செய்யாத மோடி அரசை விரட்டி அடிப்போம், இந்தியா கூட்டணி ஒன் றியத்தில் அதிகாரத்தில் அமர்ந்திட, நமது கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றார். முன்னதாக, கோவை நாடாளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசுகை யில், திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு கள் வித்தியாத்தில் வெற்றி பெறுவோம். கோவையில் உள்ள முக்கிய பிரச்சனைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். கோவையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத் தைப் போக்க நடவடிக்கை எடுக்க அதிகாரி களை சந்திப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தள பதி முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி மகேந்திரன், காங்கிரஸ் வி.எம்.சி.மனோ கரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் யு.கே.சிவஞானம், சூலூர் தாலுகா செய லாளர் சந்திரன், சிபிஐ மாவட்டச் செயலா ளர் சி.சிவசாமி மற்றும் விசிக, கொமதேக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.