districts

img

தியாகிகளுக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் அஞ்சலி

திருப்பூர், ஜூன் 19- மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடி உயர்நீத்த தியாகிகளுக்கு,  அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று மலர்தூவி அஞ் சலி செலுத்தப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் ஒரு பைசா  மின்கட்டணத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த பெருமாநல்லூர் விவசாய தியாகிகள் மாரப்பகவுண்டர், ராம சாமி கவுண்டர், ஆயிகவுண்டர் ஆகி யோரின் 53 ஆவது நினைவு தின நிகழ்ச்சி நிகழ்ச்சி திங்களன்று நடை பெற்றது. பெருமாநல்லூரில் உள்ள  நினைவு ஸ்தூபியில், தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் சார்பில் மலர் வளை யம் வைத்து வீரவணக்கம் செலுத்தப் பட்டது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அப்புசாமி தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், மாநில துணைத்தலை வரும், முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமான பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் செ.முத்துக்கண்ணன், விவசாயி கள் சங்க மாவட்ட துணைச்செயலா ளர் வை.பழனிசாமி உட்பட ஏராள மான விவசாயிகள் கலந்து கொண்ட னர். முடிவில் வடக்கு ஒன்றிய தலை வர் கே.ரங்கசாமி நன்றி கூறினார்.