districts

img

வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம்

திருப்பூர், டிச.25- கீழ்வெண்மணி தியாகிகளின் 53 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கட்சி சார் பில் எழுச்சியுடன் அனுசரிக்கப் பட்டது. கீழ்வெண்மணி தியாகிகளின் 53 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திருப்பூர் மாநகரம், காட்டுவளவு கிளையில் வேலா.இளங்கோ தலைமையில் நடை பெற்றது. மாநகரச் செயலாளர் டி. ஜெயபால் செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், மாநக ரக்குழு உறுப்பினர்கள் பி.பாலன், கோ.பொம்முதுரை, நா.சஞ்சீ வன், ப.ரமேஷ், கிளைச் செயலா ளர்கள், கட்சி ஊழியர்கள் உட்பட  பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். மடத்துக்குளம் தாலுகா, ருத் திராபாளையம்,கொழுமம், கொமரலிங்கம் ஆகிய கிராமங்க ளில் செங்கொடி ஏற்றி வெண்மணி தியாகிகள் பெயரில் உறுதிமொழி யும், முழக்கங்களும் எழுப்பப்பட் டது.

நிறைவாக ருத்திராபாளை யம், கொமரலிங்கம் ஆகிய இரண்டு இடங்களில் நினைவஞ்ச லிக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விவசாயத் தொழி லாளர் சங்க  தாலுகா செயலாளர் ஆர்.ஆறுமுகம் தலைமை வகித் தார். இதில், மாவட்டச் செயலாளர் ஏ. பஞ்சலிங்கம், தாலுகா குழு உறுப்பினர்கள் இ.மாசானம், பாலசுப்பிரமணியம், ராஜேஸ் வரி, சைலாவதி, சிபிஎம் தாலூகா  செயலாளர் ஆர்.வி.வடிவேல், தாலுகா குழு உறுப்பினர்கள் கே. ஈஸ்வரன், ஆர்.பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்ட னர். நிறைவாக, கிளைச் செயலா ளர் ஆர்.சுப்பிரமணியம் நன்றி கூறி னார். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு ஒன்றியம், அண்ணா நகரில் நடைபெற்ற வெண்மணி தியாகிகள் நினைவேந்தல் நிகழ் விற்கு சிபிஎம் கிளைச் செயலா ளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.வேலாயுதம் உட் பட பலர் கலந்து கொண்டனர். நல் லாகவுண்டம்பாளையத்தில் நடை பெற்ற நிகழ்விற்கு கட்சியின் கிளைச் செயலாளர் ஜி.சக்திவேல் தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.வேலா யுதம், வாலிபர் சங்க திருச்செங் கோடு தலைவர் ஜி.கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.