districts

img

தோழர் டி.சேஷகிரி உடலுக்கு அஞ்சலி

சேலம், பிப்.1- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க ஸ்தாபக தலைவருமான தோழர் டி. சேஷகிரி உடலுக்கு தலைவர் கள் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவர் மற் றும் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சேலம் கோட்டத்தின்  முன்னாள் துணைத்தலைவர் தோழர் டி.சேஷகிரி புத னன்று காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் கிரிஜா, தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தர்மலிங்கம், காப்பீட்டு கழக ஊழி யர் சங்க சேலம் கோட்ட பொதுச்செயலாளர் ஆனந்த், தலைவர் நரசிம்மன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் எல்ஐசி ஓய்வூதி யர் சங்கச் செயலாளர் பார்வதி, தமுஎகச நிர் வாகி தெவிட்டா மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளார் மேவை.சண்முக ராஜா, சேலம் வடக்கு மாநகரச் செயலாளர் பிர வீன் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐ.ஞானசெளந்தரி, பொது இன்சூரன்ஸ் சங்க நிர்வாகி குருசாமி ஆகியோர் இரங்கல் உரையாற்றினனர். இதனைத்தொடர்ந்து அவரது உடல் ஜான்சன்பேட்டை பகுதியில் உள்ள தகன மேடையில் எரியூட்டப்பட்டது.