திருப்பூர், ஜன.2 - திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சாமளாபுரம் பேரூராட்சி, வா.அய்யம்பா ளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர்கள் ஏ.ஜி.துரைசாமி, சி.குருசாமி, கனகராஜ் மற் றும் சு.க.மணி ஆகியோருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி திங்களன்று நடை பெற்றது. வா.அய்யம்பாளையம் மாரியம் மன் கோவில் அருகில் இந்த நினை வஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல் லடம் ஒன்றியக்குழு உறுப்பினரும், விவ சாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலா ளருமான வை.பழனிச்சாமி பங்கேற் றார். அத்துடன் சாமளாபுரம் பேரூராட் சிமன்றத் தலைவர் விநாயகா பழனிச் சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.சி.சுப் பிரமணியம், எஸ்.சோமசுந்தரம், ஏ.சி. நாச்சிமுத்து, சக்திவேல், ஈஸ் வரமூர்த்தி, ஆர்.பழனிச்சாமி, எம்.சுப்பிரமணியம்,கே.ஆறு முகம், எ.என்.ஆறுமுகம், ஏ.பி.பரமசிவம் சி.கோவிந்தசாமி மற்றும் நண்பர்கள் எஸ். எஸ்.சுப்ரமணியம், ஏ.கே.சண் முகம், ஏ.இ.ராமசாமி, எம்.பழ னிச்சாமி ஏ.ரங்கசாமி, மறைந்த நான்கு தோழர்களின் குடும்பத் தார் பங்கேற்று அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். அவர்களின் பணியை முன் னெடுத்துச் செல்வது என் றும் உறுதியேற்றனர்.