முதுமலையில் வசிக்கும் பழங்குடியினர் வனப்பகுதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள உண்ணிச்செடிகளை அகற்றி, அவற்றை கொண்டு பர்னிச்சர் செய்து விற்பனை செய்கின்றனர். வனத்துக்கு பயன்படாத உண்ணிச்செடிகளை பயனுள்ள தாக பழங்குடியினர் உருமாற்றி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்த கர், இருளர், பனியர், குறும்பர், காட்டு நாயக்கர் ஆகிய ஆறு பழங்குடியின மக் கள் வசித்து வருகின்றனர். கூடலூர் மற் றும் பந்தலூர் தாலுக்காக்களில் வசிக்கும் பனியர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர் இன மக்கள் இன்றும் விவசாய கூலிகளாக வாழ்க்கையை நகர்த்தி வரு கின்றனர். தினம் கிடைக்கும் சொற்ப வரு மானத்தில் குடும்பம் நடத்தி வருகின்ற னர். இதற்கிடையே முதுமலை புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பெட்ட குறும்பரின மக்களுக்கு உதவும் வகையில் வனத் துறை, சூழல் மேம்பாட்டு குழுக்களை ஏற் படுத்தி, அங்காடி, உணவகம் ஆகிய வற்றை பழங்குடியினர் மூலம் நடத்தப்படு கிறது. மேலும், முதுமலைக்கு அச் சுறுத்தலாக உள்ள களைச்செடிகளை அகற்றும் பணியில் பழங்குடியினர் ஈடு படுத்தப்படுகின்றனர்.
களைச்செடி மரப்பொருளானது…
இந்நிலையில், வனத்துக்கு அச் சுறுத்தலாகவும், எவ்வித பயனும் இல் லாத களைச்செடியான உண்ணிச்செடி களை பழங்குடியினர் பயனுள்ள பொருட் களாக மாற்றி வருகின்றனர். முதுமலை தெப்பகாட்டில் உள்ள குறும்பாடி கிரா மத்தை சேர்ந்த மாறன் என்ற இளைஞர், அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து, உண்ணிக்குச்சிகளை கொண்டு பர்னிச் சர்களை உருவாக்கி வருகிறார். இந்த பர்னிச்சர்கள் பல்லாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் பழங் குடியினர் வாழ்வாதாரம் மேம்பட்டுள் ளது. இதுகுறித்து மாறன் கூறுகையில், ‘எங்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்த உண்ணிக்குச்சிகளை கொண்டு பர்னிச்சர் உருவாக்க வனத்துறை உதவி யுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. நான் தற் போது எங்கள் பகுதி இளைஞர்களை கொண்டு சோபா செட், இருக்கைகள், ஊஞ்சல், டிரசிங் டெபிள் ஆகியவற்றை செய்து வருகிறேன். உண்ணிக்குச்சிகளை வேக வைத்து, பட்டையை உரித்து, குச்சிகளை பதப் படுத்தி பர்னிச்சர்கள் செய்கிறோம். இதன் பின் அதற்கு வார்னிஷ்யிட்டு விற்பனை செய்கிறோம். ஆர்டரின் பேரிலும் தேவை யானவற்றை செய்துக் கொடுக்கிறோம். எங்கள் தயாரிப்புகள் கைகளாலேயே செய்யப்படுகின்றன. மேலும், குச்சிகளை கட்ட பயன்படுத்தப்படும் பிரம்பு நார் மைசூரு மற்றும் பெங்களூரிலிருந்து கொள்முதல் செய்கிறோம். ஆனால், எங் கள் பொருட்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. மேலும், கொரோனா காரணத்தால் முதுமலை மூடப்பட்ட தால், சுற்றுலாப் பயணிகள் இல்லாமல், எங்கள் பணியில் தொய்வு ஏற்பட்டுள் ளது.
மலிவான பொருளால் வாழ்வாதாரம் உயர்வு
இந்நிலையில், வனத்துறை மற்றும் நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கத்தினர் எங்கள் படைப்புகளை சந்தைப்படுத்த உதவுதாக உறுதியளித்துள்ளனர். எங்க ளது பொருட்கள் குறித்து வெளியே தெரிய வந்தால், விற்பனை அதிகரித்து, எங்கள் வாழ்வாதாரமும் மேம்படும்’ என்றார். வனத் துறையினர் கூறுகையில், ‘பழங்குடியின ரின் பர்னிச்சர்கள் தரமானதாக உள்ளன. கடைகளில் கிடைக்கும் பர்னிச்சர்களின் விலையை விட இவை மலிவாக உள் ளன. இந்த பர்னிச்சர்களை பொதுமக்கள் வாங்கும் போது, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்’ என்றனர்.
-சேக் அமீன்