இம்பால், மே 14- மணிப்பூரைச் சேர்ந்த பழங்குடி எம்எல்ஏ-க்கள் 10 பேர் திடீரென தனி மாநில கோரிக்கையை எழுப்பியுள்ள னர். மேலும், கூட்டாக கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றையும் அளித்துள்ளார். இவர்களில் பாஜக-வைச் சேர்ந்த எம்எல்ஏ -க்களும் 7 பேர் அடங்குவர். மணிப்பூரில் ‘மெய்டெய்’ (Meitei) என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு ‘பட்டியல் பழங்குடியினர்’ அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இவர்கள் மணிப்பூர் மாநி லத்தின் மக்கள் தொகையில் சுமார் 52 சதவிகிதம் என்பதால், அவர்களின் வாக்கு களைப் பெறுவதற்காக, பழங்குடி அந் தஸ்து தருகிறோம் என்று பாஜக தூண்டிவிட்டது. அவர்களின் வாக்கு களையும் பெற்றது. பின்னர் வழக்கம் போல மவுனமாகிவிட்டது. ஆனால், ‘மெய்டெய்’ மக்கள், இந்த விவகாரத்தில் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தை நாடி னர். மெய்டெய் மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் உரிய முடிவு எடுக்குமாறு மணிப்பூர் பாஜக அரசுக்கு கடந்த ஏப்ரல் 19 அன்று உத்தரவிட்டனர். ஆனால், மெய்டெய்’ மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த குக்கி, நாகா உள்ளிட்ட பழங் குடி பிரிவினர் மற்றும் ‘அனைத்து மணிப் பூர் பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM)’ சார்பில், 7 மாவட்டங்களில் ‘பழங்குடியி னர் ஒற்றுமை பேரணி’ நடத்தினர். இதற்குப்போட்டியாக ‘மெய்டெய்’ மக்களும் பேரணி நடத்தவே, இரண்டு சமூகத்தினருக்கும் இடையே பெரும் வன்முறை வெடித்தது. இதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயம் அடைந்தனர். வீடு, வாகனம், வர்த்தக நிறுவனங்கள் தீ வைக்கப்பட்டன. ராணுவம் வரவழைக் கப்பட்டு தற்போது போதுமான பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தா லும், இரு தரப்பு மக்களுக்கு இடையே யான பதற்றம் குறையவில்லை.
இந்நிலையில், பாஜக-வைச் சேர்ந்த 7 எம்எல்ஏ-க்கள், குக்கி மக்கள் கூட்டணி யைச் சேர்ந்த 2 எம்எல்ஏ-க்கள், ஒரு சுயேட்சை எம்எல்ஏ என மொத்தம் 10 எம்எல்ஏ-க்கள் கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்டெய் சமூகத்தினர், பழங்குடியினரைத் தொடர்ந்து தாக்கி வருவதாகவும் அவர்களுடன் இணை ந்து அதே இடத்தில் இருப்பது ஆபத்தா னது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், “பழங்குடியினருக்கு தன்னாட்சி அதிகாரம் பொருந்திய ஒரு பகுதியை வரையறுத்து தரவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர். “மணிப்பூரில் பெரும்பான்மை யாக வசிக்கும் மெய்டெய் சமூகத்தி னர் பழங்குடிகளுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். ஆளும் பாஜக அரசு மவுனமான அதை ஆதரித்தது. மணிப்பூர் மாநிலம் எங்களை பாதுகாக்க தவறி விட்டதால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்கீழ், மணிப்பூரில் இருந்து பிரிந்து இந்திய ஒன்றியத்தின் கீழ் தனியாக வாழ விரும்புகிறோம். இதுகுறித்து பழங்குடி மக்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவை எடுக்க உள்ளோம்” என்று மணிப்பூர் எம்எல்ஏ-க்கள் தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தின் சைகோட் தொகுதி பாஜக எம்எல்ஏ பவோலி யன்லால் ஹவோ கிப் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “மணிப்பூர் மாநிலத்தில் ஒரு இன அழிப்பு வெளிப்படையாக அரங்கேறுகிறது. ‘மெய்டெய்’ மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் கிராமங்களில் ‘குக்கி’ மக்களின் குடி யிருப்புகள் குறிவைத்து சூறையாடப் படுகின்றன. மணிப்பூர் காவல்துறையும் குக்கி மக்களுக்கு எதிரான, இன அழிப்பு அரசியலுக்கு ஆதரவாக உள்ளனர். நான் எனது முதல்வர் (பைரேன் சிங்) மீது நம்பிக்கை இழந்து விட்டேன். பாரபட்சம் கொண்ட பைரன் சிங் ‘குக்கி’ மக்களுக்கு எதிரானவர். அவரது ஆட்சியில் “மெய்டெய்” கலவரக்காரர் களுக்கு அரசுப் படைகள் வெளிப்படை யாக உதவி செய்வதாகத் தெரிகிறது. எனவே, இப்பிரச்சனையைக் கையாளும் விதத்தில் மாற்றம் வேண்டும் என்பதால் மணிப்பூரில் ஆட்சித் தலைமை மாற்றத்தை நான் விரும்புகிறேன், இல்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அம லாக்க வேண்டும்” என்று ஹவோ கிப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.