districts

img

சிஐடியு, விச, விதொச சார்பில் நடைபயணம்

சேலம், மார்ச் 20- தில்லியில் ஏப்ரல் 5 பேரணி நடைபெறும் பேரணியின் அவசியம் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், சேலம், உதகை யில் சிஐடியு, விச, விதொச சார்பில் நடை பயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது. விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக் கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ20 ஆயிரம் வழங்க வேண்டும். படித்த இளைஞர்க ளுக்கு தகுதிக்கேற்ற வேலையை உருவாக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட நாட்களை 200 நாட்களாக அதிகரித்து, ரூ600 கூலி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தில்லியில்  வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி 5 லட்சம் பேர் பங் கேற்கும் பேரணி நடைபெற உள்ளது. இப்பேரணியின் நோக்கங்கள் குறித்து  மக்களிடம் பிரச்சார இயக்கமாக கொண்டு  செல்ல தமிழகம் முழுவதும், சிஐடியு, விவசா யிகள் சங்கம், விவசயா தொழிலாளர் சங்கம் நடைபயண இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக சேலத்தில், மார்ச் 20 முதல் 25 வரை சேலம் மாவட்டத்தில் 30 மையங்களில் பிரச்சார இயக்கங்களை சிஐ டியு சார்பில் நடைபெற்றது. பால் மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடை பெற்ற இயக்கத்தில், சிஐடியு மாவட்ட செய லாளர் ஏ. கோவிந்தன், மாவட்ட தலைவர் டி. உதயகுமார், மாவட்ட பொருளாளர் வி.  இளங்கோ, நிர்வாகிகள் எஸ்.கே.தியாக ராஜன், ஆர்.வெங்கடபதி, பி.பன்னீர்செல் வம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரை யாற்றினர். 

நீலகிரி

இதேபோன்று நீலகிரி மாவட்டம், உதகை தலைகுந்தா பகுதியில் இருந்து எச்பி எப் பிங்கர்போஸ்ட், பங்சேரி கிராஸ், ஏடிசி உள் ளிட்ட இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.  சிஐடியு மாவட்ட தலைவர் எல்.சங்கரலிங் கம் தலைமை ஏற்றார். இதில் சிஐடியு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன், விவசாய சங்கத் தின் தாலுக்கா தலைவர் கே.ராஜேந்திரன், தாலுகா செயலாளர் சி.கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் நடைபயணத்தில் உரையாற்றினர்.