உடுமலை, டிச.7- போக்குவரத்து தொழிலாளர்க ளுக்கு 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும் என உடுமலை யில் நடைபெற்ற சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற, அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களும் வலியுறுத்தி யுள்ளது. உடுமலை போக்குவரத்து பணி மனையின் முன்பு செவ்வாயன்று போக் குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழி லாளர்களும், ஓய்வு பெற்ற தொழிலா ளர்களும் இணைந்து சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்தினர். இதில், போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு 15 ஆவது ஊதிய ஒப்பந் தத்தை பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுடைய 98 மாத காலமாக அகவிலைப் படி உயர்வை உடனடியாக தர வேண்டும். கடந்த 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு போக்குவரத்துக் கழகத்தில் வேலைக்குச் சேர்ந்த தொழிலாளர்களை பழைய பென்ஷன் திட்டத்தில் இணைக்க வேண்டும். ஓட்டு நர், நடத்துநர் மற்றும் பராமரிப்பு பிரிவி லுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டது. சிஐடியு சங்கத்தின் மண்டல துணைப்பொதுச்செயலாளர் விஸ்வநா தன் தலைமையில் நடைபெற்ற இந்நி கழ்ச்சியில், சிஐடியு கிளைச்செயலாளர் கார்த்திகேயன், கிளைத்தலைவர் பாபு, சங்கத்தின் நிர்வாகி பெரிய மயில்சாமி மற்றும் எஐடியுசி சங்கத்தின் மண்டல துணைப்பொதுச்செயலாளர் த.நாக ராஜ், செயலாளர் மாசிலாமணி, ஐஎன்டி யுசி மண்டலத் தலைவர் ஜஹாங்கீர், கிளை செயலாளர் நாகூர் பாபு, எச்எம் எஸ் சங்க நிர்வாகி வரதராஜன் மற்றும் ஓய்வு பெற்றோர் அமைப்பு சார்பாக உடு மலை பகுதி செயலாளர் காளிமுத்து, பொருளாளர் நாச்சிமுத்து, துரைராஜ் மற்றும் செல்வராஜ், துறை அதிகாரி களாக இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் துணை மேலாளர் பாலதண்டபாணி, உத விப் பொறியாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.