திருப்பூர், செப்.20- சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களுக்கு போராட் டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் காங்கேயத்தில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நிறுவனங்களுக்குள் தொழிற்சங்கம் அமைக்க வழிவகை செய்துள்ள நிலை யில், சாம்சங் இந்தியா நிறுவனம் அரசியல் அமைப்பிற்கு எதிராக தொழிற்சங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரு கிறது. இந்த போக்கை கண்டித்து சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களுக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக காங்கேயத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகி என்.நடராஜ் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஆர்.நாச்சிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.தங்கவேல், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.காளிராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.