கோவை, டிச. 28- கோவை மாவட்டத்தில் இருந்து, கனிம வளங்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கடத் துவது அதிகரித்து வருவதாகவும், இதனை கனிமவளத்துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட அரசுத்துறை கள் கண்டும் காணாமலும் உள்ள தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில் செம் மண், கிராவல் மண் எடுப்பது அதி கமாகி விட்டது. எம் சாண்ட் பி சாண்ட் ஜல்லி போல்டர் கற்கள், சைஸ் கற்கள் ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தியும், சப்ளையும் அதிகமாகி வருகிறது. கோவை மாவட்டத்தில் செம்மண் எடுப்பது வெகுவாக குறைக்கப்பட்டது. அனுமதியின்றி இயங்கிய 146 செங்கல் சூளைகள் மூடப்பட்டது. தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் சூளைகள் மூடப்பட்டிருந்தாலும், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் நாட்டு செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. செம்மண் எடுப்பது, செங்கல் உற்பத்தி செய்வது உள்ளிட்ட வைகள் அனுமதியின்று செயல்படு வதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. மாவட்ட அளவில் கல் குவா ரிகள் செயல்படுகிறது என்றாலும், இந்த குவாரிகளில் இருந்து எடுக் கப்படும் கற்கள் கிராவல் போன் றவை மாவட்ட எல்லைக்குள் குறைவாகவே சப்ளையாகிறது. ஆனால், கேரளா மாநிலத்திற்கு 60 முதல் 70 சதவீதம் சப்ளை செய்யப்பட்டு வரும் திடுக்கி டும் தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லி போல்டர் கற்கள் அதி கமாக சப்ளையாகிறது. பாலக் காடு, சித்தூர் கஞ்சிக்கோடு திருச் சூர் மலப்புரம் என பல்வேறு பகுதிகளுக்கு கோவை மாவட்ட கனிம பொருட்கள் தடையின்றி சப்ளையாகிறது என்கின்றனர் சமூச செயற்பாட்டாளர்கள். இதுகுறித்து அவர்கள் கூறு கையில், கொரோனா நோய் தொற்று காலத்தில் கனிம பொருட் கள் விநியோகிக்க சில சலுகை கள் வழங்கப்பட்டது. இந்த சலு கையை பயன்படுத்தி கனிமங்கள் கொள்ளையடிப்பது போல் கேரள மாநிலத்திற்கு சப்ளை செய்யப்ப டுகிறது. திருப்பூர் ஈரோடு மாவட்டங் களில் குவாரிகள் கணிசமாக இருக்கிறது. அங்கேயுள்ள கனி மங்கள் உள் மாவட்ட தேவைக்கு போதுமானதாக இருக்கிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் உள்மாவட்ட மக்களின் தேவையை காட்டிலும் அதிகளவு கனிமங்கள் உற்பத்தி செய்து கேரளாவிற்கு ஏறக்குறைய இரு மடங்கு விலைக்கு விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
கேரளா பதிவு எண் கொண்ட 300க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் 10 டன்னிற்கும் மேலாக எடையை ஏற்றி செல்லப்ப டுகிறது. 24 மணி நேரமும் இந்த கனிமங்கள் சப்ளையாகிறது. தினமும்2 ஆயிரம் லோடு வரை கேரள மாநிலத்திற்கு கடத்தப்ப டுகிறது. மாவட்ட நிர்வாகம் இதை தடுக்காவிட்டால் கிணத்துக்கடவு, மைலேரிபாளையம் சுல்தான் பேட்டை செட்டிபாளையம். மலு மிச்சம்பட்டி மதுக்கரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் கனிமங்கள் இழந்து எந்த வித பயன்பாட்டிற்கும் உதவாத பள்ள தாக்கு போல் மாறி விடும் அபாயம் இருக்கிறது. மேலும், அர சுக்கு பெரும் வருவாய் இழப்பு இதனால் ஏற்படுகிறது. தினசரி 300க் கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் ஏற்றிச்செல்வது அதிகாரிகளுக்கு தெரியாது என் றால், தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்கள் என்பதே உண்மை என்றனர். இது தொடர்பாக கனிம வளத் துறை அலுவலர்களிடம் கேட்கை யில், டிரோன் சர்வே. எவ்வளவு கனி மங்கள் குவாரிகளில் எடுக்கப்படு கிறது என ஆய்வுகள் நடக்கிறது. அதிக கனிமம் எடுப்பதை இது வரை கண்டறிய முடியவில்லை. கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்வதாக வருகிற புகார் குறித்து உரிய கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுத்து வரு கிறோம் என்றனர்.