கோவை அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு அனைத்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் மற்றும் ஓய்வூதியர் நல அமைப்புகள் சார்பில் வேலை நிறுத்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், சிஐடியு சம்மேளன துணை பொதுச்செயலாளர் எம்.கனகராஜ், மாவட்டத் தலைவர் எம்.வேளாங்கன்னிராஜ், கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எம்.பரமசிவம், பொருளாளர் ஆர்.கோபால், டிடிஎஸ்எப் மாவட்டப் பொருளாளர் நடராஜன், அனைத்து ஓய்வு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு அனைத்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் பெற்றோர் நல அமைப்புகள் சார்பில் டி.விஜயகுமார், எம்.அருணகிரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.