கோவை, ஏப். 27- கடும் வெயிலால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளதால், டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானை கள் வால்பாறை உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தி பகுதியில் கும்கி யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு வனத்துறையினர் சார்பில் சுமார் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகி றது. இந்நிலையில் இந்த ஆண்டு சரி யான மழைப்பொழிவு இல்லாததால் வனப்பகுதி முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள் குட்டைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. இதன்காரணமாக, கோழிகமுத்தி யில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, கோழிகமுத்தி முகாமில் இருந்து வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி எஸ்டேட் பகு திக்கு கும்கிகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஓய்வு பெற்ற கலீம் யானை, பேபி, காவேரி உள்ளிட்ட யானைகளையும் மற்றும் வரகளையாறு பகுதிக்கும் சின்னாறு பகுதி என மூன்று இடங்களுக்கு யானைகள் கொண்டு செல்லப்படுகிறது. ஆறு யானைகளை மட்டும் வளர்ப்பு யானைகள் முகாம் அருகே பராமரிக்கப்பட்டு வருகின்றன. டாப்சி லிப் பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததாலும் மேலும் யானைகள் முகாம் பகுதியில் உள்ள யானை பாகன்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவ தாலும் தற்போது இந்த 20 யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆனைமலை புலிகள் காப்பக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானைக் கூட்டம் இதனிடையே கோவை தடாகத்தை அடுத்த வீரபாண்டிப்புதூரை அடுத்த மூலக்காடு எனும் மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஊரின் எல்லையில் வனவிலங்குகள் பறவைகள் நீர் அருந்து வதற்கு தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்து தண்ணீர் நிரப்பி வைக்கின்ற னர். இந்நிலையில் வியாழனன்று மாலை அப்பகுதிக்கு குட்டிகள் உடன் வந்த 10 க்கும் மேற்பட்ட காட்டு யானை கள் தண்ணீர் தொட்டியில் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் அருந்தின. இதனை அங்கு இருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். தற் பொழுது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.