கோவை, ஜூன் 18- எல்ஜிபிடிக்யூ பிளஸ் நபர்களின் உரிமைகளை கொண்டாடவும், வலுப்படுத் தவும் சுயமரியாதை மாதத்தை (ஜூன்) முன்னிட்டு கோவையில் சனியன்று மாற்று பாலினத்தவர் உள்ள டக்கிய எல்ஜிபிடிக்யூ பிளஸ் நபர்கள்பங்கேற்ற வானவில் பேரணி நடை பெற்றது. கோவை ஆறுமுக்கு பகுதியில் துவங்கிய பேரணி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று சிவானந்த காலனியில் நிறைவடைந்தது. இதில், அனைத்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ‘எளல்ஜிபிடிக்யூ பிளஸ்’ உள்ளடக்கிய பாலியல் கல்வி வகுப் புகளை தொடங்க வேண்டும். அனைத்து பொது இடங்களிலும், அரசுக்கு சொந்த மான நிறுவனங்களிலும் பாலின நடுநிலை கழிப்பறைகளை உருவாக்கிட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட் டது.